ஜோதிடம் என்பது அனைவருக்கும் ஆவலை ஏற்படுத்தும் விஞ்ஞானம் என்பது ஒரு புறம் என்றால், கிரஹ பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்கள் ஓரு ராசியிலிருந்து மற்றொன்றிற்கு செல்லும் பெயர்ச்சி (planetary transit) ஒவ்வொருவரின் வாழ்விலும் தொடர்புடையது.  செவ்வாய் வீட்டில் அதாவது செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு இருந்தாலும், ராகுவின் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் என்ன நடக்கும் தெரியுமா?


இந்த கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள், சிந்திக்காமல் செயல்பட்டு, அவசரகதியில் முடிவெடுத்து, பிறகு அதனால் அவதிப்படுவார்கள். ஜாதகத்தில் சூரியன் தான் ஜாதகருக்கு ஊக்கம் தரும் சக்தியாக இருப்பார்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


ஒருவரின் ஜாதகத்தில் ஷட்பலம் இழந்த சூரியன், ஆறில் புதனுடன் மறைந்தால், அந்த ஜாதகர் எந்தவொரு விஷயத்திலும் அவசர முடிவெடுத்து செயல்பட்டு, நிலைமையை சிக்கலாக்கிக் கொள்வார்.


குரு பலமிழந்து, ராகுவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஜாதகர்கள், அனைத்தையும் பொதுமைப்படுத்திப் பேசுவார்கள். துதல், பெரிய அளவில் செய்கின்றவர்கள் ஜாதகத்தில் ராகு தரும் ஜாலம். 


சந்திரன் வக்ர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், சிறிய உடல்நலக் கோளாறையும் பெரிதுபடுத்தி அனைவரையும் கலவரப்படுத்தும் குணம் கொண்டவராக ஜாதகர் இருப்பார். 


அதே போல சிறிய தவறையும், பூதாகரமாக்கி பேசுவதோடு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி பூர்வமாக பேசும் குணத்தையும் கொடுப்பவர் சந்திரன் தான். சந்திரனின் பலம் குறைந்திருந்தால், தனக்கு மட்டுமே துன்பம் துரத்துகிறது என்று சொல்வார்கள்.


மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும்


தன்னை தாழ்த்திக் கொண்டு புலம்ப வைக்கும் ஜாதகர்களின் ஜாதகத்தில் சந்திரன் மட்டுமில்லாது சுக்கிரனும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருப்பார்.


எதிலும் சமரசம் செய்துக் கொள்ள் முடியாதவர்களும், தங்களீன் விருப்பம் நிறைவேறாவிட்டால் வருத்தத்தின் உச்சத்துக்குப் போகும் நபர்களின் ஜாதகத்தில் செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். அதில் சூரியனின் தாக்கம் இருக்கும்.  


சூரியன் பலமிழந்து இருக்கும் ஜாதகர், எந்த எதிர்மறை விஷயம் நடந்தாலும் அதற்கு தனது அதிர்ஷடமே காரணம் என சொல்லி துன்பத்தை தாங்களே வரவழைத்துக் கொள்வார்கள்.  


ஜாதகத்தில், ஐந்தாமிடம், ஒன்பதாமிடம், மூன்றாமிடம் வலிமையாகவும், குருவும் நல்ல ஷட்பலம் பெற்றிருப்பவர்கள், மலையாய் துன்பம் வந்தாலும், அதை விதியின் வலிமை என்று எண்ணி, ஏற்று சமாளிப்பார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR