புதிய ஊதியக் குறியீடு சமீபத்திய புதுப்பிப்பு: புதிய ஊதியக் குறியீடு குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இது அமலுக்கு வருமா என்ற கேள்வி பல நாட்களாக ஊழியர்களின் மனதில் இருந்து வருகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதியக் குறியீடு குறித்த பல செய்திகளும் வதந்திகளும் நீண்ட நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதில் தொடர்ச்சியாக அவ்வப்போது பல புதுப்பிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய ஊதியக் குறியீடு: எப்போது நடைமுறைப்படுத்தப்படும்?


புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்படும் தேதி என்ன? இதில் பல வித குழப்பங்கள் நிலவுகின்றன.  இதை அறிந்துகொள்ள இன்னும் அனைவரும் காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக் குறியீடு நீண்ட நாட்களாக அமல்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இது குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழும்பினாலும், தெளிவான ஒரு செய்தி இன்னும் இது குறித்து பெறப்படவில்லை. 


தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன், சமீபத்திய புதுப்பிப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்


நான்கு தொழிலாளர் குறியீடுகளின் வரைவு விதிகள் பெரும்பாலான மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. புதிய விதிகள் உரிய நேரத்தில் அமல்படுத்தப்படும். தயாரிக்கப்பட்ட வரைவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வெவ்வேறு குறியீடுகள் சரியான முறையில் செயல்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு ஊதியக் குறியீடு குறித்த வரைவுகளை 31 மாநிலங்கள் அனுப்பியுள்ளன.


அதே நேரத்தில், தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 ( The Industrial Relations Code, 2020) குறித்து 26 மாநிலங்களில் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. 25 மாநிலங்கள் சமூகப் பாதுகாப்பு குறியீடு 2020 (The Code on Social Security, 2020) குறித்த வரைவுகளை அனுப்பியுள்ளன. மறுபுறம், தி ஆக்குபேஷனல்  பாதுகாப்பு உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு, 2020 ( The Occupational Safety Health and working Conditions Code, 2020) குறித்த வரைவுகள் 24 மாநிலங்களிலிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளன.


இறுதி தேதியை மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும், மத்திய அரசு தயாராக உள்ளது


புதிய ஊதியச் சட்டம் விரைவில் அமலுக்கு வரக்கூடும் என தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நான்கு குறியீடுகள் குறித்த வரைவுகளும் மாநிலங்களிடமிருந்து பெறப்பட்டதும் இது குறித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், குறியீடுகள் படிப்படியாக செயல்படுத்தப்படலாம்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, Old Pension Scheme நன்மைகள் கிடைக்கும்: இதை செய்தால் போதும்


மத்திய அரசு விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும். குறியீடுகள் அறிவிப்பு தேதியிலிருந்து பொருந்துவதாக கருதப்படும். மாநிலங்கள் தங்கள் சொந்தக் குறியீடுகளை அமல்படுத்த அனுமதி வழங்கப்படும் வகையில் இந்த விஷயத்தில் தளர்வு இருக்கக்கூடும். எனினும், நான்கு குறியீடுகளுக்கும் இறுதிக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்குப் பிறகு, கடைசி தேதிக்குள் அனைத்து குறியீடுகளும் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு, மாநிலங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படும். 


விடுமுறை நாட்கள், வேலை நேரம் மற்றும் நாள் ஆகிய விதிகள் மாறும்:


29 மத்திய தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 புதிய குறியீடுகள் (புதிய ஊதியக் குறியீடு) உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு (OSH), சமூகப் பாதுகாப்புக் குறியீடு மற்றும் ஊதியக் குறியீடு ஆகியவை இதில் அடங்கும். ஆனால், ‘வெஜ்’ (‘veg') என்பதன் வரையறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தில், சம்பளத்தில் 50 சதவீதம் நேரடியாக ஊதியத்தில் சேர்க்கப்படும்.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ வாரிய உறுப்பினரும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விர்ஜேஷ் உபாத்யாய், ‘ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஊழியர்களின் வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பி.எஃப், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி, ஓய்வு போன்ற முக்கியமான விஷயங்களில் விதிகள் மாற்றப்பட வேண்டும். 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய தடை விதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரம் மட்டுமே வேலை இருக்கும்.’ என கூறினார்.


மேலும் படிக்க | Aadhaar Update கோரிக்கை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? இதுதான் காரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ