திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நட்சத்திர தம்பதிகள் நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி சுவாமி தரிசனம் செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல  நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும்  நிக்கி கல்ராணி ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.


திருமணமான இரண்டு வாரங்களிலேயே தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துள்லனர். திருமணம் முடிந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.


மேலும் படிக்க | திருப்பதியில் அலைமோதும் கூட்டம்; தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு


முன்னதாக சாமி தரிசனம் செய்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி புகைப்படம் அடுத்து கொண்டனர்.


முன்னதாக, சில நாட்களுக்கு முன்னதாக திருமணமான நட்சத்திர தம்பதிகளின் திருமண வரவேற்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் நாசர், நடிகர் விஜயகுமார், அருண் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.


இசைஞானி இளையராஜாவும் நட்சத்திர தம்பதிகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். திருமண வரவேற்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.


மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe