2021 ஆம் ஆண்டில் பொருளாதாரத் துறையில் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன, ஆனால் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். நீங்கள் ஆயுள் காப்பீட்டை வாங்கப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. புதிய ஆண்டில் டர்ம் பிளான் அதாவது கால காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது மிகவும் எளிதானதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 1, 2021 முதல், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 'சரல் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை' (Saral Life Insurance Policy) வழங்கப் போகின்றன. இதில், நீங்கள் குறைந்த பிரீமியத்தில் கால திட்டங்களையும் வாங்க முடியும். குறைந்த வருமானம் உடையவர்கள் இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.


எளிய ஆயுள் காப்பீட்டை (Life Insurance) வழங்குவது ஆயுள் காப்பீட்டு துறையில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிகமான மக்களுக்கு காப்பீட்டு கவசம் வழங்கப்படும் என்றும் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.


அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDA) அறிவுறுத்தலின் பேரில் எளிய ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வழங்குகின்றன. கால ஆயுள் காப்பீட்டை அனைத்து மக்களுக்கும் மலிவாகக் கிடைக்கும் ஒரு அம்சமாக மாற்ற IRDA அறிவுறுத்தியது.


இந்தக் கொள்கையில் (Policy) பல அம்சங்கள் உள்ளன. அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் விதிமுறைகளும் நிபந்தனைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். இதில் உறுதி செய்யப்பட்ட தொகை மற்றும் பிரீமியமும் ஒரே மாதிரியாக இருக்கும். இதன் நன்மை என்னவென்றால், பாலிசியை கிளெயிம் செய்யும்போது சர்ச்சைக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.


வாடிக்கையாளர்கள் பல்வேறு பாலிசிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அந்தந்த பாலிசிகளின் விலைகளையும் வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் கிளெயிம் தீர்வு விகிதங்களையும் கண்டிப்பாக ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் முடிவெடுக்க வேண்டும்.


ALSO READ: Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?


இந்தக் கொள்கையின் அம்சங்கள் எப்படி இருக்கும்?


இது 'நான்-லிங்க்ட்’ மற்றும் 'ப்யூர் ரிஸ்க் டர்ம் லைஃப் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக' இருக்கும். பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறந்துவிட்டால், அவரை சார்ந்தவர்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும்.


பாலிசி வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள் பாலிசிதாரர் இறந்துவிட்டால், விபத்தில் மரணம் தவிர வேறு எந்த சூழ்நிலையிலும் கட்டணம் செலுத்தப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரல் லைஃப் இன்சூரன்சின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு மெச்யூரிட்டி நன்மை மற்றும் சரண்டர் வேல்யுவும் கிடைக்காது.


இந்த பாலிசியை யார் வாங்கலாம்


எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்த பாலிசியை வாங்க பாலினம், வசிக்கும் இடம், கல்வித் தகுதி மற்றும் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த வரம்பும் இல்லை.


வயது வரம்பு, சம் அஷ்யூர்ட் விவரங்கள்


சரல் பீமா காப்பீட்டுக் கொள்கைக்கு, குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகவும் உள்ளது. பாலிசியின் காலம் 5 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கும். இதில், குறைந்தபட்சம் ரூ .5 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ .25 லட்சம் சம் அஷ்யூர்ட் கிடைக்கும்.


ALSO READ: வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR