புதுடெல்லி: செவ்வாய் கிரகம் உலக நலன் தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.  செவ்வாய் கிரகம், ஆற்றல், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறது.  ஒவ்வொரு மாதமும் செவ்வாய் வேறு ராசிக்கு மாறும்போது, ​​பல ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையும், சில ராசிகளுக்கு மத்திம அல்லது பாதகமான பலன்களையும் கொடுக்கிறார் செவ்வாய் பகவான்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் 4 ஆம் தேதி செவ்வாய் கிரகம், துலாம் ராசியை விட்டு வெளியேறி கன்னி ராசிக்குள் நுழைய உள்ளது. நாளை முதல் அடுத்த மாதம் அதாவது 2022 ஜனவரி 15ம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும் செவ்வாய் பெயர்ச்சியில்  6 ராசிக்காரர்களுக்கு மிகவும் உத்தமமான பலன்கள் ஏற்படும். தடைபட்டு நின்றிருந்த காரியங்கள் கைகூடும். செவ்வாயின் தற்போதைய பெயர்ச்சியின் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.


விருச்சிகம்: இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வியில் மேம்பாடு ஏற்படும். நிலுவையில் உள்ள பட்டம் அல்லது டிப்ளமோவையும் நீங்கள் பெறலாம். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், வியாபாரம் விரிவடையும். நல்ல காலம் வந்துவிட்டது என்ற நம்பிக்கை வலுவாகும், செவ்வாயின் கடைக்கண் பார்வையால் வருமானம் அதிகரிகும் வாய்ப்பும் தென்படுகிறது.  


ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!


கடகம்: சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த செவ்வாய்ப் பெயர்ச்சிபல நன்மைகளைக் கொடுக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும், வீட்டில் பணவரவு அதிகரிக்கும். குழந்தையினால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம், எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.  


ரிஷபம்: உங்களின் பணித்திறனும், வேலையில் விருப்பமும் அதிகரிக்கும். பயணங்களுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் புதிய கூட்டு வரலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் பெருகும், செல்வம் வந்து சேரும்.


மகரம்: வியாபார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. சொந்த வீடு, வாகனம் வாங்கலாம். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.  கிடப்பில் போடப்பட்ட பல பணிகள் முடிவடையும்.


ALSO READ | ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும்


துலாம்: புதிய தொழில் அல்லது புதிய கூட்டாண்மை தொடங்கலாம். வருமானம் பெருகும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நோய்கள் அகலும், போட்டிகளில் வெற்றி பெறலாம். உங்கள் பேச்சுத் திறமை உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுபசெலவு செய்யும் வாய்ப்புகளுக்கான அறிகுறி தென்படுகிறது.  வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


சிம்மம்: வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும், மாணவர்கள் கல்வியில் முன்னேறுவார்கள், பணியில் இருப்பவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். நல்ல காலம் பிறந்துவிட்டது என்று மகிழ்ச்சியடையலாம். காதல் உறவுகள் நன்றாக இருக்கும்.


(பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை.)


ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR