ஜோதிட சாஸ்திரப்படி எந்த ஒரு கிரகத்தின் ராசி மாற்றத்தின் பலன் மேஷம் முதல் மீனம் வரை இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு, கிரகத்தின் நிலை சுப பலனைத் தரும் அதேசமயம் சிலருக்கு அசுப பலனைத் தரும். அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில், கிரகங்களின் நீதிபதியான சனி பகவான், ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது சனி வக்ர பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.


மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, சனி வக்ரம் மகிழ்ச்சியின் வரங்களைத் தரக்கூடியது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வருமானம் அல்லது லாப விகிதம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்கள் விருப்பங்கள் ஏதாவது நிறைவேறாமல் இருந்தால், இக்காலத்தில் அது நிச்சயம் நிறைவேறும்


ரிஷபம்: உங்களின் ஜாதகத்தில் சனிபகவான் பத்தாம் வீட்டில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த காலகட்டத்தில் உங்கள் கௌரவமும், மரியாதையும் கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பையும் பெறலாம். உங்களின் பணி நடை மேம்படும். வேலையில் உங்களைப் பாராட்டலாம். ரிஷபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஜோதிடத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே சனி உங்களுக்கு நன்மையளிக்கும். இக்காலத்தில் நற்செய்திகளையும் பெறுவீர்கள். முக்கியமாக ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.


மகரம் - சனியின் வக்ர நிலை மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் இருந்து வேறு இடத்திற்கு பின்னோக்கி பயணிக்கவுள்ளார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வாகனம், நிலம் வாங்க இதுவே சிறந்த நேரம் இது. நீங்கள் ஒரு சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மகர ராசியை சனி பகவான் ஆட்சி செய்கிறார். எனவே, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.


கும்பம்: கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் சில நற்செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. முக்கியமாக உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR