பிற்பகலில் அதிக நேரம் தூங்குவது, இதய நோய் மற்றும் இறப்பு ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான மக்கள் மதியம் தூங்குவதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்த நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மேலும், இது மரணத்தின் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. டிஜிட்டல் அனுபவத்தில் ESC கூட்டம் 2020-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பிற்பகலில் அதிக நேரம் தூங்குவது, இதய நோய் மற்றும் இறப்பு ஆபத்தை அதிகரிப்பதாக கண்டறியபட்டுள்ளது. 


இந்த பகுப்பாய்வில் மொத்தம் 3,13,651 பேர் 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் பங்கேற்றனர், அவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்பகலில் தூங்கினர். சீனாவின் குவாங்சோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். இசட். பான் கருத்துப்படி, "பகல்நேர தூக்கம் உலகளவில் பொதுவானது மற்றும் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது". 


ALSO READ | நட்சத்திர சோம்பின் ஆரோக்கிய நன்மைகள்: சமையலறையில் உள்ள ரகசிய பொருள்!


"ஒரு தூக்கத்தை எடுத்துக்கொள்வது வேலை திறனை மேம்படுத்துகிறது, மேலும் தூக்கமின்மையால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்கிறது. பொதுவாக இந்த இரண்டு சிக்கல்களையும் எங்கள் ஆராய்ச்சியில் சவால் செய்துள்ளோம், ”என்றார்.


60 நிமிடங்களுக்கும் மேலாக தூங்குவது தூங்காதவர்களுடன் ஒப்பிடும்போது இதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இரவில் தூங்குவது பற்றி பேசினால், இரவுக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். 


இருப்பினும், பிற்பகலில் 60 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குவது இதய நோய்க்கு ஆபத்து இல்லை. டாக்டர்.பான் கருத்துப்படி, "இரவில் போதுமான தூக்கம் வராமல், மதியம் 30 முதல் 45 நிமிடங்கள் தூங்காதவர்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" என தெரிவித்துள்ளது.