புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...   


ராசிபலன் - 01-10-2021


மேஷம் : வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை மேம்படும் நாள்.


ரிஷபம் : உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வியாபார பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள்.


Read Also | ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் இவை தான்...


மிதுனம்: மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், அறிமுகமும் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். கண்பார்வை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


கடகம்: குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். நண்பர்களுக்கிடையே எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம் : உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களின் மூலம் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்.


கன்னி : மூத்த சகோதரர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அனுபவமும், லாபமும் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பொறுப்புகள் மேம்படும் நாள்.


துலாம் : உத்தியோக பணிகளில் கௌரவ பொறுப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.


Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?


விருச்சிகம் : தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உள்ளுணர்வு சிந்தனைகளின் மூலம் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். காரியங்கள் சித்தமாகும் நாள்.


தனுசு : வியாபார பணிகள் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் காலதாமதமாக கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் லாபம் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும் நாள்.


மகரம் : வாழ்க்கைத்துணைவர் வழியில் பொருளாதாரம் மேம்படும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைவில் நிறைவு பெறும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முதலீடுகளின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும் நாள்.


கும்பம் : தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பயிற்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள்.


மீனம்: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் நேரிடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகள் குறையும் நாள்.


Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR