வெந்தயத்தின் பக்க விளைவுகள்: வானிலை குளிர்ச்சியாகிவிட்டதால், காய்கறி கடைகளில் பச்சை காய்கறிகள் ஏராளமாக வரத் தொடங்கியுள்ளன, அவற்றில் ஒன்று தான் வெந்தயம். வேண்டுமானால் வெந்தயத்தை பரோட்டா செய்து சாப்பிடலாம், அதை காய் செய்தும் சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்தும் இதை சாப்பிடலாம். வைட்டமின் பி6, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தனிமங்கள் நிறைந்த வெந்தயம் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெந்தயத்தை (Fenugreek Side Effects) சாப்பிடுவது எப்போதும் நன்மை பயக்கும் என்றாலும், வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவதும் சில தீங்குகளை ஏற்படுத்தும். எனவே அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்:


செரிமான பிரச்சனை:
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தருவது மட்டுமின்றி, அதிகப்படியான நார்ச்சத்தும் இருப்பதால் செரிமானத்துக்கு இடையூறு விளைவிப்பதால் சர்க்கரை அளவு மிகக் குறைகிறது. இது நிச்சயமாக உடலுக்கு ஆபத்தானது.


மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?


உயர் இரத்த அழுத்தம்:
வெந்தயத்தின் இலைகளிலும் நல்ல அளவு சோடியம் உள்ளது, இது அதிகப்படியான உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். வெந்தயத்தின் தன்மையும் சூடாகக் கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, அதை அதிகமாக உட்கொள்வது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.


கேஸ் பிரச்சனை:
அதிக அளவு வெந்தயம் எடுத்துகொள்ளும் போது அவை உடலில் வாய்வு அளவை அதிகரிக்க கூடும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றூம் சமநிலையில் இருக்க வேண்டும். அதனால் வாய்வு அதிகமாகும் போது பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக வாய்வு கோளாறுகள் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை தனித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கோளாறு அதிகரித்துவிடும்.


நீரிழிவு நோயாளிகள்:
நீரிழிவு இருப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்தாக இருக்கும் என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது எதிர்மறை விளைவுகளை உண்டாக்காது. எனவே மூலிகை குணங்களை கொண்டிருக்கும் இயற்கை மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் அந்த மருந்து சாப்பிடும் நாட்களில் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். அந்த மருந்துடன் வெந்தயம் சேரும் போது தலைச்சுற்றல் பிரச்சனை உண்டாகக்கூடும்.


ஒவ்வாமை புகார்:
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வெந்தயம் சிலருக்கு மட்டும் ஒவ்வாமையை உண்டு செய்கிறது. வெந்தயத்தை தனித்து அதிகளவு எடுக்கும் போது ஹார்மோன் உணர்திறன் அதிகரிக்கும் சக்தியை உண்டாக்குகிறது. எனவே அளவாக எடுத்தால் உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது. அளவு அதிகமானால் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும்.


​எவ்வளவு சாப்பிடலாம் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்:
ஒவ்வொருவர் உடல்நிலையை பொறுத்து அவர்கள் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய அளவு தீர்மானிக்கலாம். 


* கொழுப்பு சத்து உடலில் அதிகமாக இருந்தால் அவர்கள் தினசரி 10 முதல் 30 கிராம் வரை வெந்தயத்தை சாப்பிடலாம்.
* நீரிழிவு நோயாளிகள் 2.5 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துகொள்ளலாம். 
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உடலில் குளுமை இல்லை யெனில் தினமும் 500 மி.கிராம் வரை எடுக்கலாம். 


எனவே அளவாக எடுத்தால் வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ