கணவரின் அண்ணன் மூலம் விந்துணு தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனையிலிருந்த நிலையில் இருவரும் டாக்டரிடம் சென்று அவர்களது உடலைப் பரிசோதித்துள்ளனர். பரிசோதனையில் மனைவிக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் கணவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதையடுத்து இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருந்தனர்.


இந்நிலையில் டாக்டர் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் படி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த பெற்றோர். அதைக் கணவரின் அண்ணனிடம் இருந்து விந்து தானம் பெற முடிவு செய்து அவரை அணுகினர். அதற்கு அவர் இ-மெயில் மூலம் "நான் பணக்காரர்களுக்கு மட்டுமே விந்துதானம் வழங்குவேன். எனக்குப் பிறக்கும் குழந்தை பணக்காரனாக மட்டுமே வளர வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்களுக்குக் கூட வழங்க மாட்டேன். சொந்தமான தனி வீடு வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தான் என்னால் விந்து தானம் வழங்க முடியும்" எனக் கூறி மறுத்துவிட்டார்.


தம்பி மனைவிக்கு விந்துதானாம் வழங்க அண்ணன் மறுத்துவிட்டதைவிட அதற்கு அவர் சொன்ன காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.