தமிழகத்திற்கு எதிராக அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்க முயலும் பாஜக அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சபதமேற்போம் என திமுக செயல்தலைவர் MK ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இன்று மரியாதை செலுத்தினர்.


அந்தவகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் MK ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார். அத்தருணத்தில் அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.


பின்னர் இதுகுறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்துள்ளதாவது...



"சமூகநீதி, சமத்துவம், சமநீதியை நிலைநிறுத்திய சட்டமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், மதவெறி - இனவெறி - மொழிவெறி அரசியல் மூலம் தமிழகத்திற்கு எதிராக அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்க முயலும் பா.ஜ.க அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சபதமேற்போம்!" என பதிவிட்டுள்ளார்.