சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘2.0’ திரைப்படத்தின் இசை கடந்த அக்.,27 அன்று துபாயில் பிரமாண்டமாக வெளியானது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பு ஜீதமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மாலை 4 மணியளவில் ஒளிபரப்பாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.


ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.


ரசிகர்கள் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ள, இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியானது துபாயில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக இசையமைக்க வெளியானது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் தொகுப்பு ஜீதமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மாலை 4 மணியளவில் ஒளிபரப்பாகிறது.



முன்னதாக ‘2.0’ படம் உருவாகும் வீதம் குறித்த மேக்கிங் வீடியோவினை 3டி வடிவினில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது!