கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் தொற்றின் அளவு மேலும் குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவை எதிர்க்க பொதுமக்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. 


ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில்..!


 


இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்யா (Arya) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 


 



 


நடிகர் ஆர்யா தற்போது எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, சுந்தர் சி-யின் அரண்மனை 3, சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளன.


ALSO READ | தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR