Actor Prasanth Networth and Income: 90ஸ்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர், பிரசாந்த். விஜய், அஜித் தங்களின் கெரியர் ஆரம்பித்த காலகட்டத்தில் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார் என்றே கூற வேண்டும். பல ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போன நடிகர் பிரசாந்த் தற்போது கோட் படத்தில் மூலம் மீண்டும் நடித்து ஆரம்பித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் காவேரி, சுலக்சனா, சங்கீதா, கே. பிரபாகரன், ஜனகராஜ், சார்லி, கே.ஆர். விஜயா, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, கொச்சின் ஹனிபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல நாட்கள் ஓடி வணிக ரீதியாக வசூலை அள்ளியது. 


சினிமா கெரியரில் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ணபூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். குறிப்பாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் மிகப் பெரிய ஹீரோவாக திகழ்ந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார், மேலும் இரட்டை வேடத்தில் நடித்து இவர் பயங்கரமாக கலக்கி இருந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 


மேலும் படிக்க | 2 வருட போராட்டத்திற்கு பிறகு உருவாகும் ‘வல்லவன் வகுத்ததடா’ திரைப்படம்! 


ஜீன்ஸ் படத்திற்கு பிறகு யாருமே தொடமுடியாத உயரத்திற்கு சென்ற பிரசாந்த், கடந்த 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர், இதனால் கோர்ட், கேஸ் என அலைந்துக் கொண்டிருந்த பிரசாந்த் சினிமா மீது அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனுடன் இதன் பிறகு நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. 


இதையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அந்தாதூண் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகாமல் இருக்கிறது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் தற்போது நடிகர் பிரசாந்த்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தி.நகரில் பிரமாண்டமாக பிரசாந்த் கோல்டு டவர் ஒன்றை வைத்துள்ளார். இது சுமார் 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் ஆகும். அதில் ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இதன் வாடகை மட்டும் பல கோடி ரூபாய் ஆகும். இது மட்டுமில்லாமல் பிரசாந்த் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதன் மூலமாகவும் நல்ல வருமானத்தை அவர் பெற்று வருகிறார். இதனுடன் இவரிடம் ஆடி, பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களும் உள்ளன. பல இடங்களில் சொந்த வீடுகளும் உள்ளன. அதன்படி இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ.85 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ