சின்னத்திரையில் விஜேவாக தனது பணியை துவங்கியவர் நடிகர் ரியோ ராஜ். பின்னர் பல பிரபலமான ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டேடி போ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார். மேலும் இதன் பின்னர் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோவாக களமிறங்கிய இவர் மிகவும் பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார். அவர் தான் டைட்டில் வின்னர் பட்டம் பெறுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் 2வது ரன்னர் அப்பாக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது வெள்ளித்திரைக்கு சென்றவர்களில் ஒருவரான ரியோ ராஜ் இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017 ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தில் துணை கதாபாத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ரியோ ராஜ். அதை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரால் பெரிய அளவில் வெற்றி கொடுக்க முடியவில்லை. eninum பல பட வாய்ப்புகள் குவிந்தது. 


மேலும் படிக்க | ஆவேசம் தெலுங்கு ரீ-மேக்!! ஹீரோ யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிருவீங்க..


எனினும் ரியோ நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜோ' திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பாவ்யா திரிவிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் மற்றுமொரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.


இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ் நடிக்கிறார். அவருடன் இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 


பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 


இந்த படத்தின் தலைப்பினை அறிவிக்கும் காணொளி அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 



இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ