Silk Smitha Death Reason Latest News In Tamil : பெரும்பாலான 70 ஸ் 80ஸ் கிட்ஸ்களுக்கு கனவு கன்னியாக இருந்தவர் தான் சில்க்ஸ்மிதா இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத ஆளுமை. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள், இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை உடலால் மட்டுமல்லாமல் கண்களாலாலும் காட்ட முடியும் என்று நிரூபித்தவர்தான் சில்க் ஸ்மிதா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்..


ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் பலரை தனது கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித் கணவுக்கண்ணி. விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸமிதா ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . குடும்ப வறுமை காரணமாக  சினிமாவுக்குள் நுழைந்த அவர் வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு இந்திய சினிமாவை ரூல் செய்தார் . சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும் எதையும் எளிதாக பற்றி கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது.


தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா  காதலுக்காகவும், அன்புக்காகவும்  ஏங்கினார் என்றும் அவர் ஒருவரை காதலித்தார் என்றும்  சொல்லப்படுகிறது. முக்கியமாக அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது மனதில் பெரிய மாளிகையையே கட்டி வைத்திருந்தார் எனவும் ஆனால் சில்க் ஸ்மிதா காதலித்தவர் அவரை ஏமாற்றியதாகவும் அதனால் தான் அவர் திடீரென  தற்கொலை செய்துகொண்டார் என்றும் இப்போது வரை பேசப்படுகிறது.  இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது


மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் லிஸ்ட்! யார் குக்-யார் கோமாளி? முழு பட்டியல்..


அதில் பேசியுள்ள அவர், சில்க்  தனது வாழ்க்கையில் செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது. அது தான் காதல். காதலிக்கலாம் தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. ஆனால் அவர் தனது தாயையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார்.  உறவினர்களை பக்கத்தில் வைத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள்;  நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று  தெரிந்துகொண்டால் ரொம்பவே ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் ஏமாற்றப்பட்டு அதனால் ஏற்படபட்ட மன அழுத்தத்தால் பலியானார் என்று கூறியுள்ளார்.


சில்க் ஸ்மிதா இறப்பு குறித்து பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் நடிகை ஜெயமாலினி அவர் பற்றி பேசி இருக்கும் கருத்துக்கள் தற்போது சில்க் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. 


மேலும் படிக்க | Vijay : விஜய்யின் காரை அப்பளம் போல் அடித்து நொறுக்கிய கேரள ரசிகர்கள்! வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ