நமீதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமீதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். நமீதா கடந்த 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். பின்பு எங்கள் அண்ணா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதேபோல் எரிக் மேனிங் இயக்கிய மாயா என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார். இதையடுத்து ஏய், இங்கிலீஷ்காரன், பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை போன்ற படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். 2000 களின் நடுப்பகுதியில், அவர் தமிழ் படங்களில் கவர்ச்சியான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 


மேலும் படிக்க | ’ஆதாரத்தோடு கிசுகிசு பேசுகிறேன்’ கே.ராஜனுக்கு பதிலடி கொடுத்த பயில்வான் ரங்கநாதன்


ஆனால் உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்புகளை இழந்த நமீதா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றுள்ளார். இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான நமீதா, சமீப காலமான அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். கடந்த 2016-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த நமீதா, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த நமீதா, அதில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.


கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நமீதா. இன்று 41-வது பிறந்தநாள் கொண்டாடும் நமீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 


இந்த நிலையில் தற்போது இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்கள் சிலவற்றைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் அந்த பதிவில், புதிய அத்தியாயம் தொடங்கியதும், நிறைய மாறியருக்கிறேன். என்னுள் ஏதோ மாறியது, மிகவும் மென்மையாக இருக்கிறேன். புதிய வாழ்க்கை, புதிய உயிரினங்கள் என்னை அழைக்கின்றன, நான் உன்னுடைய வருகைக்காக தான் வேண்டிக் கொண்டிருந்தேன். உன்னுடைய வருகையின் தருணத்தை தான் விரும்பினேன். உன்னுடைய மென்மையான உதைகள், அதனால் எனக்குள் ஏற்படும் படபடப்புகள், அவை அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, இதுவரை நான் இப்படியில்லை. என்னை புதிய ஆளாக நீதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறாய். எப்போதும் இருப்பதை விட மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


 



 


 



 


 



மேலும் படிக்க | வலிமையை சாய்த்த கே.ஜி.எப் 2 - பீஸ்ட் நெக்ஸ்ட் டார்கெட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR