தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை, சுரேகா வாணி. பல ஹீரோக்களுக்கு இவர் அம்மாவாக நடித்திருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர், திடீரென்று மொட்டையடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுரேகா வாணி:


ஆந்திராவை சேர்ந்த நடிகை, சுரேகா வாணி. தெலுங்கு மொழியில் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்களுக்கு, இவர் அண்ணியாக, அக்காவாக, அம்மாவாக கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழிலும் அதே போல அம்மா, அண்ணி, அம்மா கதாப்பாத்திரங்களில் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் முக்கிய குடும்ப உருப்பினராக நடித்துள்ளார். அது மட்டுமன்றி, விகர்ம் நடித்த தெய்வ திருமகன் படத்திலும் எம்.எஸ்பாஸ்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார். விஜய்யுடன் மெர்சல் படத்திலும், அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்திருக்கிறார். 


கணவர் உயிரிழப்பு..


நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா சின்னத்திரை நிகழ்ச்சிகளின் இயக்குநராக இருந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலாமானார். இவர்களுக்கு, சுப்ரிதா என்ற மகள் உள்ளார். கணவரின் இறப்பிற்கு பிறகு, சில படங்களில் நடித்த சுரேகா, சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார். தனது மகளுடன் எடுத்த போட்டோக்களை வெளியிடுவது, அவருடன் ரீல்ஸ் செய்து பதிவிடுவது ஆகியவை இவரது ஹாபியாக உள்ளன. இந்த நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. 


மேலும் படிக்க | Pongal 2024 Movies: பொங்கலன்று ஒளிபரப்பாகும் புதுப்படங்கள்! எந்த சேனலில் எதை பார்க்கலாம்?


 



மொட்டையடித்த நடிகை..


நடிகை வாணி, தனது தலையை திடீரென மொட்டையடித்து இரண்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவர், தனது தலை முடியை நீளமாக வைத்திருந்தார். இதை வைத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகியிருக்கின்றன. இந்த நிலையில், இவர் திடீரென்று மொட்டையடித்தது ஏன் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். ஒரு சிலர், உங்களுக்கு புற்றுநோயா என்று கேட்டு கூட, கேள்வி கேட்டனர்.


மொட்டையடித்ததற்கான காரணம்..


நடிகை வாணி, தான் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு கீழ், “நியூ யியர், நியூ மீ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, மொட்டையடித்துக்கொள்வது புது ட்ரெண்டாக உள்ளது. அதே போல, இவரும் இந்த கெட்-அப்பை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர், இவர் திருப்பதிக்கு சென்று தனது நேரத்திக்கடனை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய வாணி:


சுரேகா வாணி, சில மாதங்களுக்கு முன்னர் போதை பொருள் சர்ச்சையில் சிக்கினார். தெலுங்கு சினிமா நடிகர்களுக்கு ஒரு தயாரிப்பாளர் போதை பொருள்களை சப்ளை செய்வதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் போதை பொருள் வழங்கிய லிஸ்டில் சுரேகா வாணியில் பெயரும் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


மேலும் படிக்க | ‘ஜோ’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! எந்த தளத்தில் ரிலீஸ் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ