நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் அன்று மாஸ் அப்டேட் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது லைகா நிறுவனம். இதனிடையே துணிவு படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வரை தொடர்ந்து பைக் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். அஜித்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பைக் ரைடிங் செல்வது, ரேசிங் செல்வது போன்ற பல விஷயங்களில் ஈடுபாடு காட்டி வந்தார். படங்களில் பைக்கை வைத்து ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் கொடுத்துவிட்டால் போதும் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார். அந்த அளவிற்கு பைக்கின் மீதும் பயணத்தின் மீதும் காதல் கொண்டிருப்பவர் அஜித் குமார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே அவரது ரசிகர்கள் தொடர்ந்து "விடாமுயற்சி" படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்காத நாளில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு அது நடக்காமல் போனது. இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால் இந்த திரைப் இந்தப் படத்தில் அர்ஜூன்தாஸ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது மட்டும் தகவல் வெளியானது. மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா..?


மறுபுறம் இந்த திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த திரைப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாது. விரைவில் இது தொடர்பான தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் தொடர்பாக மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும் தனது ஸ்டைலில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தின் ஆரம்பகட்ட பணியை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் என மூன்று ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பை முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இவை அனைத்து ஷெட்யூல் செய்த நேரத்தில் நிறைவு பெற்றால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்து வெளியான முதல் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.



மேலும் படிக்க | Rajinikanth: 2 மணி நேரம் மலையேறி தியானம் செய்த ரஜினி! வைரலாகும் புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ