தெலுங்குப்படமான "அர்ஜூன் ரெட்டி" திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்த படம் பெரும் வரவேற்ப்பை பெற்று, நன்றாக ஓடியதால், முதல் படத்திலேயே ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானார். தெலுங்குப்படமான "அர்ஜூன் ரெட்டி" தமிழிலும் ரீ-மேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஷாலினி பாண்டே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் "மகாநதி" படத்திலும், "100% காதல்" படத்தில் ஜி.வி.பிரகாஷுடனும், "கொரில்லா" படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். தமிழில் மூன்று படங்களில் நடித்து வருவதால், தெலுங்கு திரைத்துறையில் பிரபலமானது போல தமிழிலும் பிரபலமாகி தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என ஷாலினி பாண்டே கூறியிருந்தார்.


சமிபத்தில், ஷாலினி பாண்டே நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் புகைப்படங்களை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.