19 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘கில்லி’ படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தவர், ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த மே மாதம், இவர் ரோஜாஷி பருவா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஷிஷ் வித்யார்த்தி​:


தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், விக்ரம், அஜித், தனுஷ் உள்பட பலரது படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தவர், ஆஷிஷ் வித்யார்த்தி. இவரை வில்லன் நடிகராகத்தான் நம்ம ஊர் ஆட்களுக்கு தெரியும். இவர் நடிப்பில் வெளியான கில்லி, தில், தமிழன், ஆறு, பகவதி, பாபா என பல படங்கள் மாஸ் ஹிட் அடித்துள்ளன. விஜய்யுடன் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்டுள்ள படங்களில் நடித்துள்ளார் ஆஷிஷ். இவர், தற்போது யூடியூப் சேனல் வைத்து இளசுகளையும் கவர்ந்து வரும் பிரபலமாகிவிட்டார். 


மேலும் படிக்க | ரஜினி-கமல் படங்களில் பணிபுரிந்த திரைப்பிரபலம் உயிரிழப்பு..!


இரண்டாவது திருமணம்:


நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் ரோஜோஷி பருவாவை முதல் திருமணம் செய்தார். இவருக்கு வாலிப வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவரகளது திருமணம் வர்க்-அவுட் ஆகாமல் போனதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த மே மாதம் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜாஷி பருவா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வரை சுழன்று கொண்டிருக்கின்றன. 


2வது மனைவியுடன் தேனிலவு:


நடிகர் ஆஷிஷ், தனது இரண்டாவது திருமணத்தை மனைவியுடன் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார். அடிக்கடி அவருடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்வதையும் இவர் வழக்கமாக்கி கொண்டுள்ளார். இந்த நிலையில், இவர் தனது புது மனைவில் ரூபாலியுடன் இந்தோனேசியாவில் பாலி தீவிற்கு ஜாலியாக ஹனிமூன் சென்றுள்ளார்.


ரசிகர்கள் கமெண்ட்:


ஆஷிஷ் வித்யார்த்தி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு கீழ் “ஒற்றுமையில் மகிழ்ச்சி காண்கிறோம்” என்று கேப்ஷன் எழுதியுள்ளார். ஒரு சில ரசிகர்கள், “இந்த வயதில் இதெல்லாம் தேவைதானா...” என ஆற்றாமையில் கேட்டாலும் பலர் இவருக்கு ஹார்ட்டீன் மழை பொழிந்து வருகின்றனர். ஒருவர் ‘காதலித்தால் இந்த மாதிரி காதலிக்க வேண்டும்’ என கமெண்ட் செய்ய இன்னொருவர் ‘உங்கள் இருவரையும் இப்படி பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கமெண்ட் செய்துள்ளார். இவர்களது திருமண புகைப்படத்தை போல இந்த புகைப்படமும் வைரலாகி வருகின்றன. 


முதல் மனைவியின் பதிவு..


ஆஷிஷ் வித்யாத்திரிக்கு இரண்டாவது திருமணம் ஆன புதிதில் அவரது முன்னாள் மனைவியான ரோஜோஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ரோஜோஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உனக்கு ஏற்ற ஆள், உனக்கு துன்பம் தர வேண்டும் என ஒருபோதும் எண்ண மாட்டார். அதை ஞாபகம் வைத்துக்கொள்” என்பது போன்ற வார்த்தைகளை பகிர்ந்திருந்தார். இன்னொரு பதிவில் “இத்தனை நாட்கள் நீ வலிமையுடன் இருந்து விட்டாய், இது உனக்கான ஆசிர்வாதங்களை நீ பெற வேண்டிய நேரம்..” என்பது போன்ற வாசகத்தை குறிப்பிட்டிருந்தார். இது நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 


மேலும் படிக்க | ‘மாவீரன்’ படத்திற்கு தடையா..? ரிலீஸ் சமயத்தில் படக்குழுவுக்கு வந்த நெருக்கடி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ