எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நேற்று வெளியாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் நேற்று நாடு முழுவதும் வெளியாகியது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.


கேரளாவில் நடிகர் மம்முட்டியின் கிரேட் பாதர் படத்தின் முதல் நாள் வசூலான ரூ.4.31 கோடிய முந்தி உள்ளது கிரேட் பாதர் 202 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. ஆனால் பாகுபலி-2 300 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது.


இந்தியாவில் மட்டும் பாகுபலி-2, 3500 திரையரங்குகளில் திரையிடபட்டு உள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 4800 இடங்களில் 6700 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.


ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் முதல் நாள் ரூ60 கோடி வசூலாகி உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ70 கோடி வசூலாகி உள்ளது.