இன்றைய புரோமோவில் ஆஜீத் அர்ச்சனாவிடம் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறாரா அல்லது பிக் பாஸ் பட்டத்தை வெல்ல விரும்புகிறாரா என்று கேட்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இன்றைய இரண்டு புரோமோவில் பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை ஆரியிடம் கேட்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆரி திணறும் காட்சிகள் உள்ளது. கால் ஆரம்பித்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால் பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டிற்கு வெளியே’ என்று ஆரம்பிக்கும் பாலாஜி (Balaji Murugadoss), ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று சொல்வீர்கள். ஆனால் ஆரி (AARIநீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடவில்லையா? என்று முதல் கேள்வியை பாலாஜி வைக்கிறார்.   


ALSO READ | "கான்செப்ட்டே இது தான்" : பிக் பாஸ் பாலா எடுத்த அதிரடி முடிவு!


அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவள் நம்பவே முடியாது’ என்று பாலாஜி கூறுகிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரி தத்தளிக்கும் காட்சி புரோமோவில் தென்படுகிறது. 


இரண்டாவது புரோமோவில், பாலாவின் தந்திரத்தை புரிந்து கொண்டதாக சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி விளக்குகிறார். என்னைப்பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்தார்.  இதன் மூலம் தன்னுடைய கருத்து மட்டும் வெளியே தெரிய வேண்டும், அதுவும் எனக்கு எதிராக அந்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நோக்கம் என்று சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி கூறினார். 


இந்நிலையில் வெளியான மூன்றாவது புரோமோவில் ஆஜீத் (Aajeedh Khalique) அர்ச்சனாவிடம் (Archana Chandhoke) வீட்டிற்குச் செல்ல விரும்புகிறாரா அல்லது பிக் பாஸ் பட்டத்தை வெல்ல விரும்புகிறாரா என்று கேட்கிறார். அர்ச்சனாவின் பதிலை அறிய இன்றைய அத்தியாயத்தைப் பாருங்கள்.


ALSO READ | பிக் பாஸ் கால் சென்டர்: ஆரியின் பொறுமையை டெஸ்ட் செய்யும் பாலா! வீடியோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR