தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி. 


இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.


இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இளையராஜாவின் புத்தகங்கள்:-


> சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)


> வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)


> வழித்துணை


> துளி கடல்


> ஞான கங்கா


> பால் நிலாப்பாதை


> உண்மைக்குத் திரை ஏது?


> யாருக்கு யார் எழுதுவது?


> என் நரம்பு வீணை


> நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)


> பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்


> இளையராஜாவின் சிந்தனைகள்



விருதுகள்:-


> தமிழக அரசின் கலைமாமணி விருது


> மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது


> கேரள அரசின் விருது


>  அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் 


> பத்ம பூஷன் விருது.