சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் நானே வருவேன். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் தலைப்பு, கதைக்களம் ஆகியவற்றை செல்வராகவன் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் செல்வராகவன் (Selvaraghavan) தனுஷை (Dhanush) வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 


ALSO READ | Selvaraghavan: துப்பாக்கியுடன் செல்வராகவன்; புகைப்படம் வைரல்


நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்கள் இருந்த நிலையில் இந்த படத்தின் கதைக்களம் முழுவதுமாக மாற்றப்படுகிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த படத்தின் புதிய தலைப்பு ராயன் எனவும், புதிய கதைக்களம் ராயபுரத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ | அண்ணன் நடித்த‘சாணிக் காயிதம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR