சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பிரபலப்படுத்தி பிரபலமான நடிகர், கூல் சுரேஷ். பல படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ள இவர், தற்போது ரசிகர்களிடையே மீம் மெட்டீரியலாகவும் வலம் வருகிறார். இவர், சமீபத்தில் ஒரு பட விழாவில செய்த செயல் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘சரக்கு’ பட விழா:


வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சில படங்களை தானே இயக்கி தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம், சரக்கு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. இதில் பத்திரிக்கையாளர்கள், படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். நடிகர் கூல் சுரேஷும் இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். 


தொகுப்பாளினிக்கு மாலை போட்ட கூல் சுரேஷ்..


சரக்கு பட விழாவை நேற்று ஒரு பெண் தொகுத்து வழங்கினார். கூல் சுரேஷ், பேசுவதற்காக மேடை ஏறுகையில் கையில் ஒரு மாலையுடனும் கழுத்தில் ஒரு மாலையுடனும் வந்தார். அப்போது தன் கையில் இருந்த மாலையை, தனக்கு அருகில் நின்றிருந்த பெண்ணின் கழுத்தில் போட்டார்.



இதனால் எரிச்சலடைந்த அந்த பெண், அவரை முறைத்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக மீம் பக்கங்களில் கூல் சுரேஷ் வைரலாகி வருகிறார். 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: உறியடி போட்டியில் குணா செய்த சதி.. கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி


மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..


கூல் சுரேஷ், பெண் தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்த விவகாரம் ஒரே இரவில் விஸ்வரூபம் எடுக்க, அதற்கு மன்னிப்பு தெரிவித்து அவர் தற்போது ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பின்வருமாறு பேசியுள்ளார்: 



“சரக்கு இசை வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணிற்கு நான் மாலை அணிவித்து விட்டேன். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அப்படி நகைச்சுவையாக செய்த விஷயம்தான் அது. இதனால் எனக்கே தர்ம சங்கடம் ஆகிவிட்டது. அந்த பெண்ணின் பெயர் தெரியவில்லை, அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று பேசியுள்ளார். 


“அவர் ஜோவியலாக எடுத்துக்கொள்வார் என நினைத்தேன்..”


தான் செய்த காரியத்திற்கும் மன்சூர் அலிகானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசிய கூல் சுரேஷ், இந்த தவறுக்கு தான்தான் காரணம் என்றும் கூறினார். மேலும், அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி, பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் மேள-தாளம் அடிக்கும் பொழுது தாங்கள் ஒன்றாக நடனம் ஆடியதாகவும், இதனால் அந்த பெண் இதை ஜோவியலாக எடுத்துக்கொள்வார் என்று நினைத்து அப்படி செய்ததாகவும் அவர் கூறினார். “கூல் சுரேஷ் என்றால் காமெடி பீஸ் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நினைத்தேன், அப்படி செய்த விஷயம் இவ்வளவு பெரிதாகி விட்டது. என் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் என அனைவரும் நான் செய்தது தப்பு என்று கூறினார்கள். இந்த சம்பவம் எனக்கு மிகவும் மன வருத்தத்தை தருகிறது” என்று கூல் சுரேஷ், தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | விஜய் ஆண்டனி மகளுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ