கார்த்திகை தீபம்: உறியடி போட்டியில் குணா செய்த சதி.. கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி

உறியடிக்கும் போட்டியில் குணா செய்த சதி.. கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2023, 02:46 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • குணா பானையில் ஆசிட்டை கலந்து வைத்து கார்த்தியை பழி வாங்க திட்டமிடுகிறான்.
  • தீபா உறியடிக்க முயற்சி செய்து வெற்றிகரமாக உரியையும் அடித்து விடுகிறார்.
கார்த்திகை தீபம்: உறியடி போட்டியில் குணா செய்த சதி.. கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil TV) திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, கார்த்திகை தீபம்.

இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..?  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் குணாவுடன் நடந்த சிலம்ப போட்டியில் கார்த்திக் அவனை தோற்கடித்து வெற்றி பெற்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கோவில் திருவிழாவில் அடுத்ததாக உறியடிக்கும் போட்டி தொடங்க குணா பானையில் ஆசிட்டை கலந்து வைத்து கார்த்தியை பழி வாங்க திட்டமிடுகிறான். பிறகு மைதிலி ஐஸ்வர்யா இருப்பதை பார்த்து அவளது பெயரை கோர்த்து விட்டு உறியடிக்க வைக்க ஐஸ்வர்யா ரூபாஸ்ரீயையும் கோகிலாவையும் அடித்து விடுகிறார். 

அடுத்து குணாவின் ஆட்கள் ஆயிரம் பொற்காசு இருக்கிறது என்று சொல்லி ஆசிட் கலந்த பானையை மேலே தூக்க வைக்க தீபாவின் குடும்பத்திலிருந்து உறியடிக்க வருகின்றனர். முதலில் மைதிலி முயற்சி செய்ய அவளும் கோகிலாவை அடிப்பது போன்று சென்று விடுகிறார். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

அடுத்து ஜானகி முயற்சி செய்ய அவர் கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்.  பிறகு தீபா உறியடிக்க முயற்சி செய்து வெற்றிகரமாக உரியையும் அடித்து விடுகிறார். ஆனால் தீபாவுக்கு ஒன்றும் ஆகாததால் குணாவின் ஆட்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

இந்த நேரத்தில் கார்த்திக் என்ட்ரி கொடுத்து நீங்க பண்ண வேலையெல்லாம் எனக்கு தெரியும், அதனாலதான் ஐந்தாயிரம் பொற்காசு இருக்குன்னு சொல்லி நான் அப்பவே பானையை மாத்திட்டேன் என்று பிளாஷ்கட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News