தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது. அதன்படி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் மில்லர் படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | எமோஷனல் ஆன சிவகார்த்திகேயன், தந்தைக்காக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரல்



 



இதற்கிடையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மேலும் கூடிய விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகயுள்ளது. அத்துடன் தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28 ஆம் தேதி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


கேப்டன் மில்லர் படம் பீரியட் பிலிமாக 1930 - 40 காலக்கட்டங்களில் நடந்த சம்பவமானது. இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என வேறலெவல் லுக்கில் இருக்கிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் "மாவீரன்".. அட்டகாசமான அப்டேட்..படக்குழு வெளியிட்ட வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ