இந்திய சினிமாவின் டாப் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்... டூப்பர்... ஹிட் திரைப்படம் 'ஆயுத எழுத்து' . மூன்று வெவ்வேறு விதமான காதல் கதைகள், திரைக்கதையில் புதுமையான முயற்சி என இப்படத்தில் மணிரத்னம் மிளிர்ந்த சில தருணங்களும் உண்டு. இப்படத்தில் சூர்யா, ஆர்.மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இஷா தியோல், மீரா ஜாஸ்மின்,திரிஷா, ஸ்ரீமன், ஜனகராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் இந்தி நடிகர்களை வைத்து ‘யுவா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆயுத எழுத்து திரைப்படம் மூன்று பேரின் கதையை ஒரு புள்ளியில் இணைத்த விதத்தில் பலரால் பாராட்டப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுத எழுத்து கதை என்ன?
மூன்று இளைஞர்கள் பாலமொன்றில் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்களில் இன்பசேகர் (மாதவன்) ஓர் அடிதடிகுணம் கொண்டவன். அவன் மைக்கேலை (சூர்யா) அப்பாலத்தில் சுட்டு வீழ்த்துகின்றான். இச்சம்பவத்தை நேரில் பார்க்கிறான் அர்ஜூன் (சித்தார்த்). இதனை அனைவருக்கும் தெரிவுபடுத்துகின்றான். இச்சம்பவத்தின் பின் மைக்கேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றான். பின்னர் மூவரும் எவ்வாறு இச்சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை அவர்களின் வாழ்க்கைக் கதைகளை திரைப்படம் விளக்குகின்றது. 


 மேலும் படிக்க | என்னது இந்தியன் படத்துல கமலுக்கு டப்பிங் கொடுத்தது SPB ஆ? வீடியோவை பாருங்கள்


ஆயுத எழுத்து படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் மைக்கேல் வசந்த் ஆக சூர்யாவும், இன்பசேகராக மாதவனும், அர்ஜூன் பாலகிருஷ்ணனாக சித்தார்த்தும் நடித்துள்ளார்கள். கீதா காதபாத்திரத்தில் ஈஷா தியோலும், சசியாக மீரா ஜாஸ்மினும், மீராவாக திரிஷாவும் நடித்துள்ளனர். படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் செம ஹிட்டானது. மேலும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சூப்பர் ஹிட்டானது.


சித்தார்த் ரோலில் வேறு நடிகர்:
இந்நிலையில் ஆயுத எழுத்து (Aayutha Ezhuthu) படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுத எழுத்து படத்தின் ஆடிஷனில் முதலில் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு தேர்வானது நடிகர் ஸ்ரீகாந்த் தான். அந்த சமயத்தில் மனசெல்லாம் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஸ்ரீகாந்த், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்டாராம். இதனால் ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் ஸ்ரீகாந்த்.


அந்த சமயத்தில் மனசெல்லாம் பட தயாரிப்பாளர், தன்னுடைய படத்தை முடித்துவிட்டு தான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று மிரட்டியதால் ஆயுத எழுத்து படத்துக்காக வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்துவிட்டாராம் நடிகர் ஸ்ரீகாந்த். இதனால் கடுப்பான மணிரத்னம், தன்னை அவமதித்து போல் உணர்ந்துள்ளார், இதனால் இனிமே என் படத்துல நடிக்க உன்னை ஒருபோதும் கூப்பிடவே மாட்டேன்னு சொல்லிவிட்டாராம் இயக்குனர் மணிரத்தினம்.


மேலும் படிக்க | திருமணமாகி 15 நாட்களில் கர்ப்பம்!? அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட நடிகை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ