தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்து சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரையை புரட்டி போட்டது. அந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இயக்குநராகலாம் என்ற நம்பிக்கையும், எண்ணமும் தோன்றியது. அதனையடுத்து பலரும் சினிமா ஆசையோடு தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வண்டி ஏறினர். பாரதிராஜா தொடர்ந்து இயக்கிய பல படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை. அவரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான பாக்யராஜ், மணிவண்ணன் போன்றோர் இன்றளவும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராதிகா, ராதா, ரேவதி உள்ளிட்ட முன்னணி நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தியவர். இயக்குநராக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்திவருகிறார் பாரதிராஜா. அந்தவகையில், பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், ராக்கி உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. அவர் தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்த நாளான  ஜூலை 17ஆம் தேதியை தனது பிறந்தநாள் என பல ஆண்டுகளாக கொண்டாடிவருகிறார். ஆனால் அவரது பிறந்தநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆகும்.


மேலும் படிக்க | இவ்வளவு கவர்ச்சியா? நெட்டிசன்களை மயக்கிய யாஷிகா: வீடியோ வைரல்


அவரது பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த அவர் சிகிச்சைக்காக தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கூறி வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் நலம் விசாரித்தனர். நடிகை ராதிகா பாரதிராஜாவுக்காக பிரார்த்தனையும் செய்தார்.



இச்சூழலில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை இன்னும் சீரடையாததால் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், பாரதிராஜா உடல்நல நலிவிலிருந்து மீண்டிருக்கிறார். தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் இனிய தமிழ் மக்களே. வணக்கம் நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.


மேலும் படிக்க | வசூலில் முன்னேறும் திருச்சிற்றம்பலம் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்


மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ