Youtuber Biriyani Man Arrested: பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்து வருகிறது பிரியாணி மேன், இர்பான், டெய்லர் அக்கா சண்டை. இந்த சண்டை இணையத்தையே உலுக்கி வரும் உள்ளது. பிரியாணி மேனின் உண்மையான பெயர் அபிஷேக் ரபி ஆகும். இவர் பிரபலமான பிரியாணி மேன் என்கிற சேனலை நடத்தி வருகிறார். இவரை பல கணக்கானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். abusive என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும் என்றால் அது கட்டாயம் பிரியாணி மேன்னாக தான் இருக்க வேண்டும். ஏனெல் இவர் வாயை திறந்தாலே வன்மம், கோபம், அருவருப்பு, அசிங்கமான சொல்லை தான் அதிகம் பயன்படுத்துவார். இதை சிலர் dank, dark என்றெல்லாம் சொல்வது உண்டு. 


குறிப்பாக பெண்களை ஆபாசமாக தித்துவதும், பெண்கள் வீட்டு வேலை பார்க்க வேண்டும், திருமணம் செய்வதே வேலை பார்க்கத்தான், செம்மொழி பூங்கா பாலியல் தொழில் செய்யும் இடம் என்று இவர் பேசியுள்ளார். இப்படிப்பட்ட பிரியாணி மேன் மீது ஏற்கனவே ஒரு பீடோ புகார் உள்ளது. 


மேலும் படிக்க | தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்


இந்நிலையில் சமீபத்தில் இர்பான் மீதும், டெய்லர் அக்கா மீதும் கடுமையான புகார்களை வைத்திருந்தார் பிரியாணி மேன்தான். இர்பான் உணவு ரிவ்யூ செய்யும் நபர், மேலும் அண்மையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டுயாளர் ஆவார். அதேசமயம் டெய்லர் அக்கா என்பவர் தயாளு டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்து வருகிறார். இது ஒரு டெய்லரிங் நிறுவனமாகும். சமீபத்தில் டெய்லர் அக்கா பக்கத்தில் போடப்பட்ட வீடியோ மூலம் இவர் இவர் மிகவும் டிரெண்டிங் ஆனார். 


மறுபக்கம் பிரியாணி மேன் இர்பான், டெய்லர் அக்கா அளவிற்கு பிரபலம் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரியாணி மேன் கடந்த சில நாட்களில் இரண்டு பேரையும் தாக்கி வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில், இர்பான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றி விமர்சனங்களை வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் அவர் கூறியிருந்தார். அதனுடன் இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் சர்ச்சையுடன் பேசியிருந்தார். 


மறுபக்கம் டெய்லர் அக்கா வீடியோ ஆபாசமான வீடியோ என்றும் புகார் வைத்திருந்தார். அதனுடன் டெய்லர் அக்காவை கடுமையாக தாக்கியும் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதில் இர்பான் தன்னை பற்றி அவதூறாக பேசிய பிரியாணி மேன்னுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தார். ஆனால் டெய்லர் அக்கா பதில் தரவில்லை.


இந்நிலையில் தற்போது இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் தனது யூடியூப் லைவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக 3 மணி நேர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார்.


தற்போது பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | ரியோ நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்: வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ