தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்

நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2024, 04:49 PM IST
  • தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • தனுஷுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அறிவிப்பு வெளியீடு.
தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான் title=

நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ், தற்போது தென்னிந்திய நடிகர் என்பதை தாண்டி பான் இந்திய நடிகராக வளர்ந்து விட்டார். ஹாலிவுட் அளவுக்கு வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெவ்வேறு மொழி படங்களின் நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். நேற்று முன்தினம் இவரது இயக்கத்தில் ராயன் படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை இயக்கியதுடன் அவரே நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பால முரளி, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வெளியாகி மூன்றே நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதுடன், படத்தை மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த படங்களை கட்டாயம் குடும்பத்துடன் பார்க்கவும்

இதைத் தொடர்ந்து தற்போது இவர் ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அடுத்ததாக இந்தி படம் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து அவர் நடித்திருக்கும் இன்னொரு இந்தி படம், ‘தேரே இஷ்கு மெயின்’. அதுமட்டுமின்றி இதற்கிடையில் தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படி கைவசம் இத்தனை படங்களை வைத்துள்ள நடிகர் தனுஷுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் அந்த அறிவிப்பில் நடிகர் தனுஷை வைத்து புதிய படங்களை இயக்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கண்டிப்பாக கலந்துரையாடல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு எந்தப் புதிய தமிழ்ப் படங்களும் தொடங்கப்படாது என்றும் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்தப் படாது என்றும் தயாரிப்பில் உள்ள அனைத்துப் படங்களின் படப்பிடிப்பும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் 8 வாரங்கள் அதாவது 56 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய பிறகுதான் OTT இல் வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News