நடிகர் சிம்புவுக்கு 2021 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ’மாநாடு’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. திரும்பிய திசையெல்லாம் சிம்புவுக்கும், மாநாடு குழுவினருக்கும் வாழ்த்து மழைகள் பொழிந்தன. கடந்த சில ஆண்டுகளாக சரியான திரைப்படம் அமையாமல், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த சிம்புவுக்கு, இந்தப் படம் நல்ல திருப்பு முனையைக் கொடுத்துள்ளது. மாநாடு படம் முடித்த கையோடு ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!


இந்தப் படத்தை கவுதம்வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக் கட்டப்படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " 2021 ஆம் ஆண்டு இழப்புகளையும், நன்மைகளையும் சந்தித்து, இந்த ஆண்டை நிறைவு செய்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கு மாநாடு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக பரிசளித்தது இந்த ஆண்டு. அதனால், மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021-ஐ நிறைவு செய்கிறேன்.




2022 ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் உங்களுக்கும், எனக்கும் அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள சிம்பு, ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ எனக் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR