தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 15 வயதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கல்யாணி.  அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சிந்திப்போம் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.  2002-ல் வெளியான ஜெயம் படத்தில் சதாவிற்கு தங்கையாக நடித்து அதிக வரவேற்பை பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | திரைக்கதை எழுத்தாளராக புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி!


தற்போது இவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.  தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.  நீண்ட நாட்களாக திரையில் வராத இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் 4 நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.  சமீபத்தில் இவர் யூடியூப் சேனல்களுக்கு அளித்துள்ள சில பேட்டிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



அந்த பேட்டியில் அவர் கூறுகையில், நான் 8 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன், அவர் தற்போது பிரபலமான இசையமைப்பாளராக இயக்கிறார், அவரை நான் பார்க்கும்போது எல்லாம் என்னுடைய 8 வயது தான் நியாபகம் வருகிறது.  அந்த சிறிய வயதில் என்னால இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை, அவர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர் என்பதால் என்னால் இதை என் அம்மாவிடம் தைரியமாக கூறவில்லை.  நான் தூங்கும்பொழுது அவர் என்னிடம் பாலியல் சீண்டல் செய்வார், நான் பயந்துகொண்டு எதுவும் செய்ய இயலாமல் தூங்குவது போல பயத்துடன் நடித்து கொண்டு இருப்பேன்.  இதேபோல் தொடர்ந்து 6 மாதங்கள் நான் அவதிப்பட்டேன், எவ்வளவோ கவுன்சலிங் சென்றும் என்னால் அவரை பார்க்கும்போது அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை என்று கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமெனில் கொஞ்சம் அடஜஸ்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் எவ்வித தயக்கமுமின்றி அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.  எனக்கு திருமணம் ஆன பின்னரும் கூட ஒரு பிரபலமானவர், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்து பேசவேண்டும் என்று என்னை பப்புக்கு அழைத்தார், ஆனால் நான் அவரை திட்டிவிட்டு அதையும் மறுத்துவிட்டேன்.  இப்போது இருக்கும் குழந்தைகள் விழிப்புடன் இருக்க வேண்டும், அவர்களுக்கு செக்ஸ் எஜிகேஷன் முக்கியம்.  குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களின் பிரைவேட் பார்ட்டை கட் பண்ண வேண்டும், அவர்களுக்கு உடனடி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ஹேக் செய்யப்பட்ட நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR