நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிதுள்ள ஜெயிலர் படம், கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்குரசிகர்கள் அமாேக வரவேற்பினை கொடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் திரைப்படம்..


கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்கள் படைக்காத சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. 2.0, தர்பார் போன்ற படங்களுக்கும் இதே கதைதான். ‘பேட்ட’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதில் உண்மையான ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என ரசிகர்கள் கருதினர். இந்த குறையை எல்லாம் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் தீர்த்திருப்பதாக பலரும் விமர்சனம் கொடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | ரஜினியுடன் நடிக்க மறுத்த ‘அந்த’ பிரபல நடிகர்..! இதுதான் காரணம்..!


வசூலில் சாதனை..! 


ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான நேற்று 75 கோடியாக இருந்ததாக கூறப்பட்டது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 375 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. அதில், படம் 375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


500 கோடியை நெருங்குகிறதா..? 


ஜெயிலர் படம் வேலை நாளான வியாழக்கிழமையில் (ஆகஸ்டு 10) வெளியானது. படத்தின் முதல் நாளே வசூல் எக்கச்சக்கமாக கொட்டியது. இதையடுத்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஜெயிலர் படத்தை பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு படை எடுத்தனர். அடுத்து, விடுமுறை நாளான ஆகஸ்டு 15ஆம் தேதியும் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. அன்று ஒரு நாளில் மட்டும் படம் 33 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்ததாக கூறப்பட்டது. தற்போது, இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி நாளையுடன் 10 நாட்கள் முடிவடைய இருக்கிறது. வசூலில் ஏற்கனவே 400 கோடியை கடந்த ஜெயிலர் படம், 500 கோடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜெயிலர் படத்தின் காமியோ கதாப்பாத்திரங்கள்:


ஜெயிலர் படத்தில் பல திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த்தை தவிர அனைவருமே காமியோ கதாப்பாத்திரங்களாகத்தான் வந்து செல்கின்றனர். நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலிற்கு நடனமாடிவிட்டு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு இணையாக கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் காட்சிகள் பேசப்பட்டுள்ளது. மோகன்லாலின் நடிப்பிற்கும் படத்தின் வில்லன் விநாயகத்தின் வில்லத்தனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முழு நடிப்பையும் ஜெயிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | “ரஜினியை விட விஜய்தான் பெரிய ஆள்..” பிரபல நடிகர் கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ