Jeyam Ravi Aarthi Latest News Updates: ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயம் ரவி அவரது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார். இது சினிமா உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி எழுந்துள்ள பொதுக் கருத்துகளை வைத்து பார்க்கும்போது, எனது மௌனம் பலவீனமோ அல்லது குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல என்பதை வலியுறுத்த வேண்டியது முக்கியமாகிறது. நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்கு என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் விரும்புகிறேன். ஆனால் சட்ட அமைப்பு நீதியை நிலைநாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், எனது முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து குறித்து பொதுவெளியில் வெளியிடப்பட்டதாக கூறினேன். எனது ஒப்புதல் இல்லாமல் இது பொதுவெளியில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றுதான் கூறினேன். நான் விவாகரத்து குறித்து எனக்கு தெரியாது என கூறவில்லை. எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இன்று வரை அது மறுக்கப்படுகிறது. 



நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் மட்டுமே உள்ளது. மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் கிருபையை நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ஜெயம் ரவி-ஆர்த்தி பிரிவிற்கு காரணமான பிரபல பாடகி?! யார் அவர்?


இதற்கு முன்னர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவருக்கு விவாகரத்து குறித்து தெரியாது என குறிப்பிட்டதாக புரிந்துகொள்ளப்பட்டது. அந்த வகையில், இன்று தனது முந்தைய அறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கி உள்ள ஆர்த்தி, தனது வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கி உள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரம் பொதுவெளியில் பேசப்படுவது தான் விரும்பவில்லை என்றும் நடிகரும், அவரது கணவருமான ஜெயம் ரவி உடன் தான் தனிப்பட்ட முறையில் உரையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால், இதற்கு தொடர்ந்து ஜெயம் ரவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக ஆர்த்தி இதில் விளக்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியின் நற்பெயருக்கு விளைவிக்க மாட்டேன் என கூறியுள்ளார். தான் முன்பு சொன்ன நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ள ஆர்த்தி, ஜெயம் ரவி உடன் இணைந்து வாழ்வதில் ஆர்வமுடன் உள்ளதாக தெரிகிறது. 


நடிகர்கள் இடையே விவகாரத்து சமீப ஆண்டுகளில் அதிகம் ஏற்பட்டுள்ளது எனலாம். சமந்தா - நாகசைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா, ஜீ.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி ஆகிய சினிமா தம்பதிகள் சமீப ஆண்டுகளில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் நடிகர் நாகசைதன்யா விவகாரத்திற்கு பின்னர் நடிகை சோபிதா துவாலிபாவை திருமணம் செய்துகொண்டார். எப்போதும் சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுமக்கள் அதிக பேசுவார்கள் என்றாலும் இந்த விவகாரத்து விஷயங்களில் முழு விவரம் அறியாமல் ஒரு பக்கச் சார்பு எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. 


ஊடகங்கள் இருதரப்பினரின் கருத்துகளை எவ்வித சார்பும் இன்றி அணுகுவதை போன்று ரசிகர்களும், பொதுமக்களும் பிரபலங்கள் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையை அணுக வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. இன்று ஆர்த்தி வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது கருத்துக்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. எனவே, பிரபலங்கள் என்றாலே அவர்கள் குறித்து அவதூறுகளை பரப்பலாம் என நினைப்பது முற்றிலும் தவறானது. சமூக வலைதளங்களில் சிறிதாக எழுதினாலோ, வீடியோவாக பேசினாலோ அது ஏற்படும் அதிர்வுகள் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும்.


இதற்கு முன்னர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவருக்கு விவாகரத்து குறித்து தெரியாது என குறிப்பிட்டதாக புரிந்துகொள்ளப்பட்டது. அந்த வகையில், இன்று தனது முந்தைய அறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கி உள்ள ஆர்த்தி, தனது வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கி உள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரம் பொதுவெளியில் பேசப்படுவது தான் விரும்பவில்லை என்றும் நடிகரும், அவரது கணவருமான ஜெயம் ரவி உடன் தான் தனிப்பட்ட முறையில் உரையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 


ஆனால், இதற்கு தொடர்ந்து ஜெயம் ரவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக ஆர்த்தி இதில் விளக்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியின் நற்பெயருக்கு விளைவிக்க மாட்டேன் என கூறியுள்ளார். தான் முன்பு சொன்ன நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ள ஆர்த்தி, ஜெயம் ரவி உடன் இணைந்து வாழ்வதில் ஆர்வமுடன் உள்ளதாக தெரிகிறது.


நடிகர்கள் இடையே விவகாரத்து சமீப ஆண்டுகளில் அதிகம் ஏற்பட்டுள்ளது எனலாம். சமந்தா - நாகசைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா, ஜீ.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி ஆகிய சினிமா தம்பதிகள் சமீப ஆண்டுகளில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் நடிகர் நாகசைதன்யா விவகாரத்திற்கு பின்னர் நடிகை சோபிதா துவாலிபாவை திருமணம் செய்துகொண்டார். எப்போதும் சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுமக்கள் அதிக பேசுவார்கள் என்றாலும் இந்த விவகாரத்து விஷயங்களில் முழு விவரம் அறியாமல் ஒரு பக்கச் சார்பு எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. 


ஊடகங்கள் இருதரப்பினரின் கருத்துகளை எவ்வித சார்பும் இன்றி அணுகுவதை போன்று ரசிகர்களும், பொதுமக்களும் பிரபலங்கள் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையை அணுக வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. இன்று ஆர்த்தி வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது கருத்துக்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. எனவே, பிரபலங்கள் என்றாலே அவர்கள் குறித்து அவதூறுகளை பரப்பலாம் என நினைப்பது முற்றிலும் தவறானது. சமூக வலைதளங்களில் சிறிதாக எழுதினாலோ, வீடியோவாக பேசினாலோ அது ஏற்படும் அதிர்வுகள் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும். 


மேலும் படிக்க | ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ