தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : எபிசோட் அப்டேட்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் அழைத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து


அதாவது ரம்யா கார்த்திக்கை பெங்களூருக்கு தன்னுடன் வர சொல்ல அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். அடுத்து அபிராமியும் மீனாட்சியும் தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கோவிலுக்கு வந்த அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்கிட்டு போக வந்துள்ளனர். தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்கிறார். 


மறுபக்கம் கார்த்திக் தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருக்க அதில் ஒரு மாத்திரை கலந்து இருந்ததும், அதை சாப்பிட்டால் கொஞ்சம் நேரத்திற்கு சைக்கோ போல் நடந்து கொள்வார்கள் என்பதையும் சொல்ல கார்த்திக் யார் இந்த வேலையை செய்திருப்பா என்று கன்பியூஸ் ஆகிறான். 


இதையெல்லாம் ரம்யாவும் மறைந்திருந்து பார்க்கிறாள், பிறகு கார்த்திக் அங்கிருந்து சென்றதும் ரிசப்ஷனில் இருப்பவருக்கு பணத்தை கொடுத்து நடந்தவற்றை தெரிந்து கொள்ள கார்த்திக் போனை இங்கேயே மறந்து வைத்திட்டு சென்றிருக்க அவன் திருப்பி வர ரம்யா மீண்டும் மறைந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி கோவிலில் மீனாட்சியிடம் ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொல்ல மீனாட்சியும் அட்ரஸ் கேட்டு வாங்க இவர்கள் ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். 


மறுபக்கம் ரம்யா கார்த்திக்கிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவனை வீட்டிற்கு அழைத்து பணத்தை கொடுத்து கார்த்திக்கு கொடுத்த மோதிரத்தை திரும்ப வாங்கி கொள்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ