தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டிற்கு வந்த ரம்யா எல்லாருக்கும் கிப்ட் கொடுத்து விட்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது ரம்யா யோசனையில் உட்கார்ந்திருக்க அப்போது திடீரென அவளுக்கு ஆபிஸ் கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட்டு மோதிரம் போடுவது போல தோன்ற அதை அப்படியே உண்மையாக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், மேனேஜருக்கு போனை போட்டு எனக்கு பிறந்த நாள்னு சொல்லி கேக் வெட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய் என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!


கார்த்திக்குக்கு கேக் ஊட்டிவிடும் ரம்யா


அடுத்து ஆபிஸ் வரும் ரம்யா எல்லாரையும் கூட்டி வைத்து கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட போக அவன் கைலயே கொடுத்துடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறான், இதனால் ரம்யா பல்பு வாங்க அடுத்து நல்ல வேலை செய்யுற 5 பேருக்கு நான் மோதிரம் போட போறேன் என்று சொல்லி பெயர்களை படிக்க தொடங்குகிறாள். கார்த்திக் இந்த முறை நோ சொல்ல கூடாது என்பதற்காக ரம்யா எல்லாருக்கும் அவள் கையாலேயே மோதிரம் போட்டு விடுகிறாள். 


அடுத்து ஐந்தாவது ஆளாக கார்த்திக் பெயரை சொல்லி கூப்பிட அவன் நான் வேலைக்கு சேர்ந்தே 10 நாள் தான் ஆச்சு, எனக்கு எதுக்கு மோதிரம் என்று கேட்க ரம்யா உங்களால் கம்பெனிக்கு லாபம் கிடைச்சிருக்கு, நல்லா வேலை செய்யுறீங்க என்று சொல்லி மோதிரத்தை போட போக இந்த முறையும் கார்த்திக் என் கையில் கொடுத்துடுங்க என்று வாங்கி கொள்ள மீண்டும் ரம்யா பல்பு வாங்குகிறாள். இதையெல்லாம் நோட் பண்ண பி.ஏ ரம்யாவிடம் உங்களையும் கார்த்திக்கையும் பார்க்கும் போது ராமன் சீதையை பார்க்குற மாதிரி இருப்பதாக சொல்ல ரம்யா யாரை யாரோட சேர்த்து பேசுற என்று அறைகிறாள்.


ரவுடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தீபா


அடுத்து தீபா மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ரவுடி ஒருவன் வேண்டுமென்றே மோத அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தீபா அவனது அறைய அவன் கத்தியை எடுத்து குத்த வர தப்பி ஓடி வரும் தீபா கார் மீது மோதி கீழே விழுகிறாள். தீபா அடிபட்டு கிடப்பதாக கார்த்திக்கு போன் வர அவனும் பதறியடித்து ஓடி வருகிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ