Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?

Actor Vijay Met His Parents : நடிகர் விஜய், பல நாட்களுக்கு பிறகு தனது தாய் தந்தையரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : May 27, 2024, 06:15 PM IST
  • பெற்றோரை சந்தித்த விஜய்
  • எஸ்.ஏ.சி ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு!
  • வைரலாகும் ட்வீட்
Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்? title=

Actor Vijay Met His Parents : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது தாய் தந்தையரின் வீட்டிற்கு பல நாட்களாக செல்லாமல் இருந்தார். இதையடுத்து, அவர்களை திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன?

எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு:

விஜய் தன்னை இல்லத்தில் வந்து சந்தித்ததை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

நெடுநாட்களாக பேசாமல் இருந்த விஜய்:

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வெளியில் சொல்லப்படாத பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். முதலில், தனது தாய்-தந்தையை அடிக்கடி சந்தித்து வந்த விஜய், சில நாட்களுக்கு முன்பு அதை முற்றிலும் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. காரணம், விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அரசியல் குறித்து எங்கும் பேசாத போதே, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியல் கட்சியை ஆர்மபிக்கப்போவதாக தெரிவித்தார். இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ, இதையடுத்து விஜய் அந்த செய்தியை மறுத்துவிட்டார். விஜய்யை அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் தனது தாய்-தந்தையாரின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திவிட்டதாகவும் பேசப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, அவர் தனது தந்தை எஸ்.ஏ.சியிடம் பேசக்கூட இல்லை என்றும் கூறப்பட்டது. 

கடந்த ஆண்டு சந்தித்தார்:

நடிகர் விஜய், தனது லியோ படத்தின் ரிலீஸிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாய்-தந்தையாரை சந்தித்து பேசினார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து’ என்று குறிப்பிட்டிருக்கிறார்

தற்போது இந்த ட்வீட்டை அவரது முகப்பில் அவர் பின் செய்து வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | அம்மாவுக்காக கோயில் கட்டினாரா விஜய்? அதுவும் இவ்வளவு பெருசாவா!

விஜய் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அதில் ஆட்களை சேர்க்கும் விதமாக ஒரு செயலியையும் வெளியிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து, தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடித்து முடித்த பிறகு, தான் முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அவர், 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து மக்களுக்காகவும் அவ்வப்போது ட்விட்டர் மூலம் குரல் கொடுத்து வருகிறார். இவர் படங்களை போலவே, அரசியல் கட்சியும் வெற்றிப்பாதையில் செல்லும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News