ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் தீபாவுக்கு தன்னை கடத்தியது துரை தான் என தெரியவர அவள் இந்த விஷயம் மட்டும் கார்த்திக்கு தெரிந்தால் உன்னை வந்து வெளுத்துடுவாரு என்று வீர வசனம் பேச துரை அதெல்லாம் கார்த்தி இங்க வரதுக்கு வாய்ப்பு கிடையாது என்று அதிர்ச்சி கொடுத்தான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கார்த்தி கோவிலில் கிடைத்த சிம் கார்டை டிரேஸ் செய்து விட்டீர்களா என போலீசாரிடம் கேட்க அது உங்கள் பிசினஸ் எப்படி ரோகித்தின் பெயரில் இருக்கும் சிம் கார்டு என சொல்கின்றனர். இன்னொரு பக்கம் துரை தன்னுடைய ஆட்களிடம் இந்த சிம் கார்ட் சீக்ரெட் பற்றி சொல்கிறான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!



அடுத்து இங்கே கார்த்தி எனக்கு என்னமோ இவங்க சொல்ற மாதிரி இருக்க வாய்ப்பில்லை, நம்மை திசை திருப்ப வேறு யாரோ செய்த சதி தான் என்று சொல்கிறான். அடுத்ததாக இரும்பு சேரில் கட்டப்பட்டிருக்கும் தீபா எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க முடியுமா என முயற்சி செய்து கீழே விழுந்து பக்கத்தில் இருக்கும் பிளேடை எடுத்து கயிறை அறுத்து கொண்டு எழும்போது வெளியில் காவலுக்கு இருக்க ஆட்கள் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க தீபா ஓரிடத்தில் சென்று ஒளிந்து கொள்கிறார். 


அடுத்ததாக இந்த ஆட்கள் உள்ளே வந்து பார்க்க சேரில் தீபா இல்லாமல் இருக்க அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். தீபா அவர்களை இரும்பு சேரால் தாக்கி விட்டு அங்கிருந்த போனை எடுத்துக் கொண்டு கார்த்திக்கு ஃபோன் செய்ய ஃபோன் போகவில்லை, அடுத்ததாக வீட்டு லேண்ட் லைனுக்கு போன் செய்ய ஐஸ்வர்யா எடுத்துப் பேச அவளிடம் என்னை கடத்தியது துரை தான் என்ற விஷயத்தை சொல்கிறாள். பிறகு தீபா அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்யும்போது இன்னொரு இடத்தில் அபிராமியை கட்டி வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அப்போதுதான் துரை உனக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ