மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam Today’s Episode: மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம்.. தாத்தா போட்ட கண்டிஷன் - விறுவிறுப்பாக நடைபெறும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2023, 11:23 AM IST
  • மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம்.
  • தாத்தா போட்ட கண்டிஷன்.
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நடந்த போட்டியில் தீபா வெற்றி பெற்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அபிராமி உன்னை நான் சரியா புரிஞ்சிக்கல, இதுவரை நீ எல்லாம் எனக்காக செய்திருக்க என்று வருத்தப்பட கார்த்தி தாத்தா இது தீபாவுக்காக வைத்த போட்டி, இந்த போட்டியில் கேட்கப்பட்டது வெறும் 5 கேள்வி தான், இதை விட என்னை பற்றி உங்களுக்கு 1000 விஷயம் தெரிந்திருக்கும் அதெல்லாம் தீபாவுக்கு கூட தெரியாது என ஆறுதல் சொல்கிறான். 

மேலும் படிக்க | இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன்கள் யார் தெரியுமா?

karthideepam

 

மறுபக்கம் தீபா அபிராமி தோற்று போனதை நினைத்து வருத்தமாக உட்கார்ந்திருக்க அப்போது தர்மலிங்கம் போன் செய்து உங்களை மறுவீட்டுக்கு அழைக்க போவதாக சொல்ல தீபா அமைதியாகவே இருக்கிறாள், இதனால் ஜானகி போன் வாங்கி பேச தீபா இப்போ இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா என்று கேள்வி கேட்க அவர்கள் முறைனு ஒன்னு இருக்கு, நாங்க உங்க வீட்டுக்கு வந்து பேசறோம், அனுப்புவதும் அனுப்பாததும் அங்க விருப்பம் என்று சொல்லி போனை வைக்கின்றனர். இவர்கள் பேசியதை அந்த வழியாக கடந்து சென்று தாத்தா கேட்டு விடுகிறார். மறுநாள் காலையில்  தர்மலிங்கமும் ஜானகியும் வீட்டுக்கு வர அப்போது முருகன் சிலை வெளியே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், தீபா இவர்களை வரவேற்க ஜானகி அந்த முருகன் தான் உன்னை இந்த வீட்டுக்குள்ள அழைத்து போகணும் என்று சொல்ல தர்மலிங்கம் அந்த முருகனே வெளியே தான் இருக்காரு என்று வருத்தப்படுகிறார். 

இதனையடுத்து இவர்கள் வீட்டிற்குள் நுழைய ஐஸ்வர்யா இவர்களை தடுத்து நிறுத்தி எங்க வந்தீங்க? எதுக்கு வந்தீங்க என சத்தம் போட தாத்தா வீட்டிற்கு வந்தவங்க கிட்ட இப்படியா பேசுவ என சத்தம் போடுகிறார், தர்மலிங்கம் இவரை பற்றி விசாரிக்க தீபா கார்த்தியின் தாத்தா, பெரிய ஜமீன் என்ற விஷயங்களை சொல்கிறாள். அதன் பிறகு தாத்தா நீங்க தர்மலிங்கம், ஜானகி தீபாவோட அப்பா அம்மா சரி தானே? உள்ள வாங்க என அழைத்து செல்ல அபிராமி ஒன்னும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள், பிறகு மறுவீடு குறித்து பேச அபிராமி பதில் சொல்லாமல் இருக்க தாத்தா மறுவீட்டுக்கு நான் அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன் என ஷாக் கொடுக்கிறார். அதாவது தர்மலிங்கத்தை நாதஸ்வரம் வாசித்து காட்ட சொல்ல அவர் முதலில் தயங்க பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வசூல் மழையில் மாமன்னன்! முதல் நாள் மட்டுமே இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News