பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்துவிட்டதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடரவில்லை, இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை, இவர்கள் பிரிந்து பல நாட்கள் ஆகிறது என்று பேசப்பட்டு வந்தது. இருப்பினும், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம் என்று அபிஷேக் பச்சன் பேசும் ஒரு போலியான வீடியோ வைரலாது. இதனை பார்த்த பலர் விவாகரத்து உண்மை தான் என்று நம்பிவிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!


தற்போது, ​​அபிஷேக் பச்சன் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில விஷயங்களை செய்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டும் வைரலான இந்த வீடியோவில், அவர் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை அனைவருக்கும் காண்பித்துள்ளார். இதன் மூலம் தனக்கும் தன் மனைவிக்கும் விவாகரத்து ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். பிரபல நிறுவனத்திற்கு அபிஷேக் பச்சன் அளித்த பேட்டியின் போது, ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "அதை பற்றி உங்களிடம் பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ஒரு பொய்யான செய்தியை நீங்கள் அனைவரும் பரப்புகிறீர்கள். நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. உங்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படுகிறது. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்தி கொள்கிறீர்கள். எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை” என்று தனது மோதிரத்தை காண்பித்தார். 


வைரலாக போலி வீடியோ


அபிஷேக் பச்சன் பேசுவது போல இணையத்தில் வெளியான வீடியோ உண்மைதானா அல்லது பொய்யான வீடியோவா என்று தெரியாமல் பலரும் குழம்பி இருந்தனர். வைரலான இந்த போலியான வீடியோவில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடமிருந்து பிரிந்ததை ஒப்புக்கொள்கிறார். அதில் அவர்களின் மகள் ஆராத்யா பச்சனின் பெயரை கூட குறிப்பிடுகிறார். "கடந்த ஜூலை முதல் நாங்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்" என்று அவர் பேசுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போலியான வீடியோவை யார் தயார் செய்தது என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும், பலமுறை இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர் என்ற செய்திகள் வெளியான நிலையில், இதனை மறுத்து பேசி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 



அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா


அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரபல ஜோடிக்கு 2011ம் ஆண்டு ஆராத்யா என்ற குழந்தை பிறந்தது. பாலிவுட்டில் இருவரும் இணைந்து தாயீ அக்ஷர் பிரேம் கே, குச் நா கஹோ, குரு, தூம் 2 மற்றும் ராவன் போன்ற படங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரது திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன், நவ்யா நவேலி நந்தா மற்றும் அகஸ்திய நந்தா ஆகியோர் வந்தனர். மறுபுறம் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் தனியாக வந்தார். இதில் இருந்து விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள் அதிகம் எழுந்தது.


மேலும் படிக்க | Kana Kaanum Kaalangal: கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! யார் யார் நடிக்கிறார்கள்? முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ