Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். தற்போது இரு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் இரு படங்களில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னட இயக்குனருடன் கைகோர்த்து அஜித்?


கோலிவுடின் மாஸ் நட்சத்திரங்கள் என புகழப்படும் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் தற்போது நடித்து வரும் படங்களில் கதை இருக்கிறதா இல்லையா என்பதை பார்ப்பதை விட மாஸ் காட்சிகள் இருக்கிறதா இல்லையா என்பதை அதிகம் எதிர்பார்க்கின்றனர். அப்படி பல ஆண்டுகளாக ஏற்கனவே கைகோர்த்த இயக்குனர்களுடன் மீண்டும் பணிபுரிபவர் அஜித். இவர், கேஜிஎப் மற்றும் சலார் உள்ளிட்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் இயக்குனராக மாறிய பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 


இருவரும் கதை குறித்து விவாதித்ததாகவும், பிரசாந்த் இயக்கும் இரண்டு படங்களில் நடித்த அஜித் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. அதில் ஒன்று அவருக்கு தனியான கதை என்றும், இன்னொன்று கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இதை அடுத்து ரசிகர்கள் பலர் இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். 


அஜித்தின் மேனேஜர்: 


நடிகர் அஜித் எந்த சமூக வலைதளத்திலும் அதிகாரப்பூர்வ பக்கத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதனால் இவர் படம் குறித்து அப்டேட்டுகளையும், இவரது தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராதான் தெரிவிக்கிறார். தற்போது அஜித் நடித்து வரும் படங்களில் போஸ்டர்களை கூட அவர்தான் ப்ரமோட் செய்து வருகிறார். 


இந்த நிலையில் பிரசாந்த் நீல் உடன் படத்தில் இணைவது குறித்து அவரிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்டிருக்கின்றனர். பிரசாந்த் நீலும் நடிகர் அஜித்தும் சந்தித்தது உண்மைதான் என்று கூறிய அவர், கதை குறித்த விவாதங்கள எதுவும் இருவருக்கும் இடையே நடைபெறவில்லை என்று பேசியிருக்கிறார்.  இதனால் இருவரும் இணைந்து பணிபுரிய வாய்ப்பில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..


அஜித் நடிக்கும் இரண்டு படங்கள்:


நடிகர் அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து, இவரது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ இறுதி கட்டப் பணிகளில் இருக்கிறது. துணிவு படம் வெளியான புதிதிலேயே விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாக, படத்தின் வேலைகளும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிளான் பண்ணதை விட இந்த படத்தின் வேலைகள் மட்டும் பல மாதங்கள் இழுத்தடித்தன. அதர்வை ஜானின் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 


அதேபோல நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 80 சதவிகித படத்தின் பணிகள் முடிந்து விட்டதாகவும் இரண்டாம் கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் இந்த வருடம் ஒரு படம் அடுத்த வருடம் ஒரு படம் என இரண்டு அஜித்தின் படங்கள் ரிலீஸ் இருக்க தயாராகி வருகின்றன. 


மேலும் படிக்க | அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ