Actor Vijay Helped Neeya Naana Viral Student : தமிழ் ரசிகர்கள் பலரது உள்ளங்களை கவர்ந்த நிகழ்ச்சி, நீயா நானா. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை எடுத்து, அது குறித்து இரு தரப்பினர் பேசும் படி ஒரு டாப்பிக்கை வைத்து வாரா வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தளபதி நடிகரின் பெயர் கொண்ட தனியார் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரே நிகழ்ச்சி இதுதான். அதிலும், கோபிநாத்தான் இந்த நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகளாக இதனை தொகுத்து வழங்கி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீயா நானா நிகழ்ச்சி மூலம் வைரலான மாணவன்..


நீயா நானா நிகழ்ச்சி, ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கப்படாமல் சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதில், வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணவர்களை வைத்தும், அவர்களின் பெற்றோர் வைத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய ஒரு மாணவன் தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறார். 


நீயா நானா எபிசோடில், வேலைக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் அவர்கள், தங்களின் குடும்பத்திற்காக எவ்வளவு சிரமப்படுகிறாேம் என்பதை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய ஒரு மாணவன், தனது அம்மாவை நல்ல இடத்தில் வைத்து பார்ப்பதற்காக மூட்டை தூக்குவதாகவும், பல சமயங்களில் பஸ் இல்லை என்றால் 3 கிலோ மீட்டர் வீட்டிற்கு நடந்தே செல்வேன் என்றும் கூறினார். 


அப்போது கோபிநாத், “அப்படி நடந்து போகும் போது என்ன யோசிப்பீங்க..?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், அம்மாவை நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என்று யோசித்திருப்பதாகவும், அம்மாவிற்கு சீக்கிரமே மெத்தை வாங்கி தர வேண்டும் என்று சிந்தித்ததாகவும் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!


ஓடி வந்து உதவிய விஜய்:


நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, அந்த மாணவன் பேசிய வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலானது. இதையடுத்து, நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக்கழகம்” நிர்வாகிகள் மூலம் அந்த மாணவனுக்கு உதவியிருக்கிறார். இது குறித்து அந்த மாணவனின் தாய், ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.



விஜய், இந்த மாணவனின் இல்லத்திற்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதாகவும், மேத்தை வாங்கி கொடுத்திருப்பதாகவும் அந்த மாணவரின் தாயார் கூறியிருக்கிறார். அதே போல, மாணவனின் மூன்று ஆண்டுகளுக்கான படிப்பு செலவை, தாங்களே பார்த்துக்கொள்வதாகுவம் த.வெ.க கட்சியின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார். அந்த மாணவனின் வங்கி கணக்கிலும் ரூ.25 ஆயிரம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதை அந்த தாய் நெகிழ்ச்சியுடன் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.


ரசிகர்கள் விமர்சனம்..


நடிகர் விஜய், மாணவனுக்கு உதவிய செய்தியும், மாணவனின் தாய் பேசிய வீடியோவும் வைரலாக பரவியது. இதையடுத்து, ரசிகர்களில் ஒரு சாரார் விஜய்யின் செயலை பாராட்ட, ஒரு சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர். நீயா நானா நிகழ்ச்சியில், தற்போது உதவி பெற்ற மாணவனை விட இன்னும் ஏழ்மை நிலையில் பலர் இருக்கும் மாணவர்கள் பேசியதாகவும், அவர்களுக்கெல்லாம் ஏன் விஜய் உதவவில்லை என்றும் கேட்டு வருகின்றனர். 



இசையமைப்பாளர் தமன், தான் அந்த மாணவனுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தர ஆசைப்படுவதாக கூறி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ