Latest News Varalaxmi Sarathkumar Nicholai Sachdev : தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, பலரையும் திரும்பி பார்க்க வைத்த திருமணமாக இருந்தது, வரலக்‌ஷ்மி-நிக்கோலாய் சாச்தேவின் திருமண வைபோகம். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், சமீபத்தில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலக்‌ஷ்மி-நிக்கோலாய் திருமணம்:


தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் கதாநாயகியாக இருப்பவர், வரலக்‌ஷ்மி சரத்குமார். ‘போடா போடி’ படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு வில்லி கதாப்பாத்திரங்கள் செட் ஆக, தொடர்ந்து பயங்கர நெகடிவ் கதாப்பாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவந்தது. 


வரலக்‌ஷ்மிக்கு, நிக்கோலாய் சாச்தேவ் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் வரலக்‌ஷ்மியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இவர்களின் நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள, சங்கீத், மெகந்தி, ஹல்தி போன்ற நிகழ்வுகளில் தமிழ்திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, இவர்களின் திருமணம் தாய்லாந்தில் இம்மாதத்தின் (ஜூலை) 2ஆம் தேதி வெகு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நடந்தது. இதிலும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு:


திருமணம் முடிந்து 10 நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில், நிக்கோலாயும் வரலக்‌ஷ்மியும் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தனர். அப்போது நிக்கோலாய், வரலக்ஷமி குறித்து பேசிய விஷயங்கள் பலரை நெகிழ்ச்சி பெற செய்தது. 


முதல் காதல்..


தன் மனைவியின் முதல் காதல் குறித்து பேசிய நிக்கோலாய், வரலக்‌ஷ்மியின் வாழ்வில் முதல் காதல், முழுமையான காதல் அனைத்துமே சினிமாதான் என்று கூறினார். வரலக்‌ஷ்மிக்கு சினிமாதான் முதலில் முக்கியம் என்றும், தான் கூட இரண்டாம் பட்சம்தான் என்றும் சிரித்துக்காெண்டே கூறினார். இதனால் அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருப்பாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு தீர்ந்தது.


மேலும் படிக்க | வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடியா? அம்பானி போல் செலவு செய்த சரத்குமார்


பெயர் மாற்றம்..


வழக்கமாக, பெண்கள் திருமணம் ஆகிக்கொண்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது தங்களின் பெயருக்கு பின்னால் கணவன் பெயரை (விரும்பினால்) போட்டுக்கொள்வதுண்டு. தன் மனைவியின் பெருக்கு பின்னால் வரும் பெயர் குறித்து பேசிய நிக்கோலாய், அவர் வரலக்‌ஷ்மி சரத்குமார் என்றே என்னாளும் அழைக்கப்படுவார் என்றும் தன் மனைவிக்காக தான் “நிக்காேலாய் வரலக்ஷமி சரத்குமார் சாச்தேவ்” என்று பெயர் மாற்றம் செய்து கொள்வதாகவும் கூறினார். இது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 


நிக்காேலாய், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். திருமணத்தின் போது ஷாப்பிங் வேலையில் இருந்த வரலக்‌ஷ்மி, தன் கணவரின் மகளையும் உடன் அழைத்து சென்று புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். வரலக்‌ஷ்மி தற்போது 39 வயதாகிறது. தாமதமாக திருமணம் செய்வது குறித்தும் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவரோ, அவர் திருமணம் செய்து கொண்ட நபரோ, அல்லது குடும்பத்தினரோ இது குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Varalaxmi Sarathkumar : வரலக்‌ஷ்மியின் வருங்கால கணவர் யார்? என்ன வேலை செய்கிறார்? முழு விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ