Actor Who Wanted To Be A Police Before Entering Tamil Cinema : கோலிவுட்டில் தற்போது டாப் நடிகர்களாக வலம் வருபவர்களுள் அனைவருமே, சினிமா கனவுடன் திரையுலகிற்குள் நுழைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் சிறுவயதில் இருந்து வளர்ந்த போது வெவ்வேறு கனவுகளுடன் வளர்ந்திருப்பர். அது தகர்ந்து போகும் தருவாயில், அல்லது கைசேராத வேளையில்தான் வெவ்வேறு பணிகளை நோக்கி பயணிப்பர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவர் சினிமாவில் டாப் நடிகராக மாறுவது, அவரது விடாமுயற்சியாலும், கடினமான உழைப்பாலும்தான். இதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அதையும்தாண்டி நாம் நமது கனவிடம் உண்மையாக இருப்பதுதான் வெற்றிக்கான வழியாக அமைகிறது. அந்த வகையில், ஒரு நடிகரின் சுவாரஸ்யமான பகிர்தல் குறித்து இங்கு பார்ப்போம். 


திறமையால் வளர்ந்தவர்..!


இங்கு குறிப்பிடப்படப்போகும் இந்த நடிகரை, இப்போது சிறு குழந்தை முதல் பெரியவர்களை வரை அனைவரும் அடையாளம் கண்டு கொள்வர். அந்த அளவிற்கு பிரபலமான இவர், சினிமாவிற்குள் நுழைந்ததே 12 ஆண்டுகளுக்கு முன்புதான். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இவரை சினிமாவில் பார்ப்பதற்கு முன்னரே பலர் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். சின்னத்திரையில், மிமிக்கிரி, காமெடி, ஆங்கரிங் என பன்முக திறமைகளை கொண்டிருந்த இவர், வயது வித்தியாசமின்றி பல ஆயிரம் பேரை சிரிக்க வைத்திருக்கிறார். அந்த நடிகர் யார் என்று தெரிந்து விட்டதா? ஆமாம்..அவரேதான்..


போலீஸாக நினைத்தவர்…


அந்த நடிகர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன்தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சிலருக்கு பரிச்சயமான முகமாக மாறிய இவர், பின்னர் அந்த ஷாே ஒளிபரப்பான அதே சேனலிலேயே வெவ்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக மாறினார். இவரது திறமைக்கு கிடைத்த இன்னொரு பெரிய பரிசு, இவர் மட்டும் தொகுத்து வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘அது இது எது’ நிகழ்ச்சிதான். இதன் பிறகு சிவகார்த்திகேயனின் புகழுக்கு இறங்குமுகமே இல்லை. இதையடுத்து அவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கினார். 12 வருடங்கள் கழித்து, இவர் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராக வருவார் என்று யாருக்கு தெரியும்?



மேலும் படிக்க | மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..


சிவகார்த்திகேயன், சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு ஒரு காவல் அதிகாரியாக மாற வேண்டும் என்று நினைத்தாராம். இதற்கு அவருக்கு தூண்டுகோளாக இருந்தது அவரது தந்தைதான் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலராக இருந்தாராம். பின்னர் பணியில் இருந்த போதே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் குறித்து பேசினாலே சிவகார்த்திகேயன் கண் கலங்குவதை மக்கள் பலமுறை பார்த்திருக்கின்றனர். 


அடுத்தடுத்த படங்கள்..


நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்தார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மேஜர் முகுந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், சிவா. இதையடுத்து, ஏ.ஆர்முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சுதா கொங்கராவின் ஒரு படத்திலும் இவர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா நடிக்க இருந்த ‘புறநானூறு’ படத்தில், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. 



சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பவன் என பெயர் வைத்திருக்கின்றனர். சிவாவின் வளர்ச்சியை பார்க்கும் அவரது ரசிகர்கள், அவர் இன்னும் வளர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r