கோலிவுட் திரையுலகை பொருத்த வரை, ஒரு படத்திற்கு ஒரு நடிகரை தேர்வு செய்கிறார்கள் என்றால் அவர்களையே அந்த படத்தில் நடிக்க வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், கதை எழுதுகையில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துதான் எழுதுவர். அதன் பிறகு, பட வேலைக்காக அவரை அப்ரோச் செய்வர். அந்த நடிகருக்கு கால்ஷூட் இல்லை என்றால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விடும். இதையடுத்து வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தை எடுப்பர். அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம், பின்னர் ஃப்ளாப் ஆனது. அது என்ன படம் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா நடிக்க இருந்த படம்..ஜீவா நடித்தார்..


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மிஷ்கின் இயக்கிய ஒரு படத்தில் நடிக்க இருந்தார். அது 2012ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படம்தான். இந்த படத்தில் 9-5 வேலைகளை வெறுக்கும் இளைஞன், தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டு சுற்றும் இளைஞனின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படம்தான், முகமூடி. தனது காதலியை ஈர்ப்பதற்காக சூப்பர் ஹீரோ போல வேடம் இடும் இவன், இதனால் சில பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறான். பின்னர் அதிலிருந்து எப்படி வெளிவந்தான் என்பதுதான் முகமூடி படத்தின் கதை. 


முகமூடி படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம், அவரது முதல் படமாகும். இதில், முதலில் நடிக்க இருந்தவர் சூர்யாதான் என்று கூறியிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன். இவர், சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் இது குறித்து பேசியிருக்கிறார். 


ஜீவா நடித்திருந்தார்..


முகமூடி படத்தில் சூர்யாவை நடிக்க வைக்கத்தான் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சூர்யா, அந்த சமயத்தில் பிசியாக இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியாமல் போயுள்ளது. இதையடுத்துதான், ஜீவாவை வைத்து படத்தை இயக்கினார் மிஷ்கின். 


மேலும் படிக்க | ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?



படம் ஃப்ளாப்..


முகமூடி திரைப்படம், வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக நல்ல விமர்சனத்தை பெறவில்லை. இதனால் இப்படம் பெரும் தோல்வியுற்றது. காரணம், திரைக்கதை சரியாக இல்லை என்று கூறப்பட்டது. இதனால் விமர்சனத்திலும் படம் அடிவாங்கியது. 


இப்போது என்ன செய்கிறார்கள்?


இயக்குநர் மிஷ்கின், முகமூடி படத்தின் தோல்விக்கு பிறகு இன்னும் நிறைய படங்களை எடுத்து அதில் ஒரு சிலவற்றை ஹிட் ஆக்கினார். இவர் இயக்கத்தில் உருவாகிய பிசாசு2 திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதில், ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இதே போல நடிகர் சூர்யாவும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது கங்குவா படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘சூர்யா 44’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இதையடுத்து, நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சமீப கால திரைப்படங்கள் தாேல்வியுற்றன. கைவசம் இருக்கும் படங்களில் நடித்து வரும் அவர், தமிழை தாண்டி பிற மொழி படங்களிலும் தலைகாட்டி வருவதாக தகவல். 


மேலும் படிக்க | தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ