மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கம் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதில் மொத்தம் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர்.


இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். 


இந்த நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.