தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக இருந்தவர், பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் பாரதி ராஜா தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர், தற்போது மார்கழி திங்கள் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழநி பகுதியில் நடைப்பெற்று வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படப்பிடிப்பில் விபத்து:


மார்கழி திங்கள் படப்பிடிப்பு, தமிழ்நாட்டின் சில கிராமப்புற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இப்படி பரவலாக மழை பெய்த இடங்களில் பழநியும் ஒன்று. இந்த பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்தான் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பி நடைபெற்று வந்துள்ளது. அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதில், படப்பிடிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த லைட்டுகள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர்தப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | அஸ்தியாக வந்த மீனாட்சி..சோகத்தில் குடும்பத்தார்..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்!


சுசீந்தரன் ட்வீட்:


மனோஜ் பாரதி ராஜா இயக்கிவரும் மார்கழி திங்கள் படத்தினை இயக்குநர் சுசீந்தரன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தையடுத்து அவர், நேற்று ஒரு வீடியே பதிவை தனது சமூக வலைதள பக்ததில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் பின்வருமாறு பேசியுள்ளார். “பழநிக்கு அருகில் உள்ள ஒரு கனக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு நடுவே மார்கழி திங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்காக சென்னையிலிருந்து பெரிய கோடா லைட் எல்லாம் வரவைக்கப்பட்டிருந்தது. திடிரென்று பயங்கர மழை இடி, புயல் காற்று வர ஆரம்பித்தது. இதனால் கோடா லைட் எல்லாமே கீழே விழுந்து உடைந்து விட்டது. அது மட்டுமன்று ஒரு லைட்டின் மேல் இடியே விழுந்து விட்டது. இதில் அதிர்ஷ்ட வசமாக 5 லைட் மேன்கள் தப்பித்தனர்” என்று சுசீந்தரன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 



ரசிகர்கள் அதிர்ச்சி..!


பல வருடங்களாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் திரையுலகில் இருந்தும், அவருக்கு சரியான அங்கீகாரம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்காமலேயே இருந்து வந்தது. அவர், முதன் முறையாக இயக்கும் படத்திலாவது கண்டிப்பாக வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்காெண்டுள்ள நிலையில், இவ்வாறு ஷூட்டிங்கிள் விபத்து நடந்த செய்தியை கேட்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மனோஜ் நடித்த படங்கள்..


நடிகர் மனோஜ், 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ் மஹால் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்னர் அவரது அப்பாவான பாரதிராஜாவிடமும் அடுத்து மணிரத்னமிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவரது நடிப்பில் வெளியான சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. ஹீரோவாக மட்டுமன்றி குணச்சித்திர வேடங்ளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். தனது அப்பாவின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான அன்னக்கொடி படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். இந்த படம், தோல்வியடைந்தது. கடைசியாக கார்த்தியுடன் வில்லன் படத்தில் நடித்திருந்தார். 


மேலும் படிக்க | Pushpa 2: பெரும் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு..! யாருக்கு என்னாச்சு..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ