தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும், எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் 21 திரைப்படம் குறித்து மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 21 திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. ராணுவ களத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு முதல் முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திர தினம்..பத்திரிகையாளர்களாக கலக்கிய நடிகர்களும் அவர்களது படங்களும்



இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது. 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


மறுபுறம் அவருடைய இன்னொரு படமான ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை R. ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதே நேரத்தில் படத்தில் நகைச்சுவையான வேற்றுகிரகவாசி கதாபாத்திரமும் உள்ளது. அயலான் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் அயலான் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் அயலான் படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஹிந்தியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ஹிந்தியில் வெளியிடுகிறது என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.


இந்த ஆண்டு தொடர்ந்து பேக் டூ பேக் முக்கிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தான் ட்விட்டர் கணக்கில் இருந்து சில காலம் விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் சில மாதம் கழித்து மீண்டும் வர இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.



மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ